மடு பிரதேசத்தில் கவனயீர்ப்பு போராட்டம்.(படம்)
மடு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பாடசாலை மாணவர்களும், அப்பிரதேச மக்களும் அவசர கோரிக்கைகளை முன் வைத்து இன்று திங்கட்கிழமை(18) காலை மடு பிராதான வீதியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
மடு இரண்டாம் கட்டை பகுதியில் இருந்து பாடசாலைக்குச் செல்லும் சுமார் 150 மாணவர்கள் உள்ள போதும் உரிய நேரத்திற்கு மாணவர்கள் பாடசாலைக்கு சென்று வருவதற்கான போக்கு வரத்து வசதிகள் இல்லாத நிலை காணப்படுவதாக அவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
-பெரிய பண்டிவிருச்சான் கிராமத்தில் இருந்து நாளாந்தம் காலை 7.10 மணிக்கு பயணிகள் பேரூந்து ஒன்று சேவையில் ஈடுபடுவதாகவும்,குறித்த பேரூந்தில் பெரிய பண்டிவிருச்சான் மற்றும் சின்ன பண்டிவிருச்சான் ஆகிய இரு கிராமங்களில் உள்ள பொது மக்களை ஏற்றிக்கொண்டு பாடசாலை மாணவர்களையும் எற்றிக்கொண்டு சேவையில் ஈடுபடுகின்றது.
-இதனால் பாடசாலை மாணவர்கள் அனைவரையும் ஏற்றிச் செல்ல முடியாத நிலை காணப்படுவதாகவும், பல மாணவர்கள் உரிய நேரத்திற்கு பாடசாலைக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
-எனவே பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு உரிய முறையில் போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தி கொடுக்குமாறு கோரி மடு பிரதேசத்தைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் பெற்றோர் கவனயீர்ப்பு போராட்டத்தினை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மடு பிரதேசத்தில் கவனயீர்ப்பு போராட்டம்.(படம்)
Reviewed by NEWMANNAR
on
September 18, 2017
Rating:
No comments:
Post a Comment