அண்மைய செய்திகள்

recent
-

விஜயகலா மகேஸ்வரனுக்கு நீதிபதி இளஞ்செழியன் கண்டனம்!


வித்தியா படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சுவிஸ்குமார் விடயத்தில், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் நடந்து கொண்ட விதம் தொடர்பாக நீதிபதி மா.இளஞ்செழியன் விமர்சனம் செய்துள்ளார்.

அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் நடவடிக்கை சுவிஸ்குமார் என்று அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமாரை தப்பிக்க வைக்கும் முதலாவது நடவடிக்கை.

பொதுமக்கள் சுவிஸ்குமாரை கட்டி வைத்து தாக்கிய போது அங்கு சென்ற இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், கட்டை அவிழ்த்து விடுமாறு பொது மக்களை கோரியுள்ளார். அது நல்ல விடயம்.

ஆனால், சந்தேகநபரை பொலிஸாரிடம் ஒப்படைக்கவோ, மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவோ இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனை சந்தேகநபரான மகாலிங்கம் சசிக்குமார் நீதிமன்றில் தெரிவித்திருந்தார்.

பொதுமக்களிடம் சசிக்குமாரை அவிழ்த்து விடுமாறு கூறிய விஜயகலா மகேஸ்வரன், சசிக்குமாரின் உறவினர்கள் வந்து அவரை அழைத்துச் செல்லும் வரை சுமார் 2 மணி நேரம் இரவு 11 மணியில் இருந்து 1 மணி வரை வீதியில் காத்திருந்துள்ளார்.

இராஜாங்க அமைச்சரின் இந்த நடவடிக்கை சந்தேகநபராக ம.சசிகுமாரை தப்பிக்க வைக்கும் முதலாவது நடவடிக்கை என நீதிபதி இளங்செழியன் கூறியுள்ளார்.
விஜயகலா மகேஸ்வரனுக்கு நீதிபதி இளஞ்செழியன் கண்டனம்! Reviewed by NEWMANNAR on September 27, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.