அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் சிறு நீலாசேனை புனித யாகப்பர் ஆலயத்திற்குச் சொந்தமான 'புனித யாகப்பர் திருச் சொரூபம்' உடைப்பு-(படங்கள் )

மன்னார் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட சிறு நீலாசேனை கிராமத்தில் உள்ள புனித யாகப்பர் ஆலயத்திற்குச் சொந்தமான 'புனித யாகப்பர் திருச் சொரூபம்' நேற்று(13) புதன் கிழமை இரவு இனம் தெரியாதோரினால் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளதாக புனித யாகப்பர் ஆலய நிர்வாக சபையினர் தெரிவித்துள்ளனர்.

மன்னார்-மதவாச்சி பிரதான வீதி, நொச்சிக்குளம் றோமன் கத்தோழிக்க தமிழ் கலவன் பாடசாலைக்கு முன்பாக அமைக்கப்பட்டிருந்த புனித யாகப்பர் ஆலயத்திற்குச் சொந்தமான 'புனித யாகப்பர் திருச் சொரூபம்' இவ்வாறு உடைத்து தேசதப்படுத்தப்பட்டுள்ளது.

சுமார் ஒன்றரை (1 -1/2) அடி உயரம் கொண்ட புனித யாகப்பர் திருச் சொரூபம் கண்ணாடிப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று புதன் கிழமை(13) இரவு அப்பகுதிக்கு வந்த இனம் தெரியாத நபர்கள் கண்ணாடிப்பெட்டியின் கண்ணாடிகளை உடைத்து உள்ளே இருந்த புனித யாகப்பர் திருச் சொரூபத்தை எடுத்து சேதப்படுத்தியுள்ளனர்.

எனினும் புனித யாகப்பர் திருச் சொரூபத்தின் தலை மாத்திரம் அப்பகுதியில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக புனித யாகப்பர் ஆலய நிர்வாக சபையினர் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது








மன்னார் சிறு நீலாசேனை புனித யாகப்பர் ஆலயத்திற்குச் சொந்தமான 'புனித யாகப்பர் திருச் சொரூபம்' உடைப்பு-(படங்கள் ) Reviewed by NEWMANNAR on September 14, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.