மன்னாரில் மீட்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டது. கொலையா? தற்கொலையா? என சந்தேகம்.
மன்னார்-யாழ்ப்பாணம் பிரதான வீதி,தள்ளாடி இராணுவ முகாமில் இருந்து சுமார் நூறு மீற்றர் தூரத்தில் உள்ள காட்டு பகுதியில் இருந்து எரிந்த நேற்று திங்கட்கிழமை மாலை மன்னார் பொலிஸாரினால் மீட்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்டவர் மன்னார் தாழ்வுபாடு கிராமத்தைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான அந்தோனி தாஸ் குரூஸ் (வயது-54) என உறவினர்களினால் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
தள்ளாடி இராணுவ முகாமில் இருந்து சுமார் நூறு மீற்றர் தூரத்தில் உள்ள காட்டு பகுதியில் அடையாளம் தெரியாத சடலம் காணப்படுவதாக மன்னார் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற மன்னார் பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.
உடல் முழுவதும் எரிந்த நிலையில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த இடத்திற்கு மன்னார் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவினர் வருகை தந்து விசாரனைகளை மேற்கொண்டனர்.
மேலும் மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி,உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோர் சடலம் மீட்கப்பட்ட இடத்திற்கு வந்து விசாரனைகளை முன்னெடுத்துள்ளனர்.
-குறித்த குடும்பஸ்தர் ஞாயிற்றுக்கிழமை(24) காலை தாழ்வுபாட்டு கிராமத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து மன்னார் நகரிற்கு வந்ததாகவும்,பின்னர் அன்றைய தினம் இரவு வீடு திரும்பாத நிலையில்,நேற்று திங்கட்கிழமை காலை முதல் உறவினர்கள் அவரை பல இடங்களில் தோடியாதாக சடலத்தை அடையாளம் காட்டிய உறவினர் ஒருவர் தெரிவித்தார்.
குறித்த மரணம் கொலையா? அல்லது தற்கொலையா? என்ற விடையம் தெரிய வரவில்லை. மீட்கப்பட்ட சடலம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் மீட்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டது. கொலையா? தற்கொலையா? என சந்தேகம்.
Reviewed by Admin
on
September 26, 2017
Rating:
No comments:
Post a Comment