அண்மைய செய்திகள்

recent
-

மன்னாருக்கு வரவேண்டாம் ஐனாதிபதிக்கு எழுத்துமூலம் அறிவிப்பு....


சட்ட விரோதமாக தனியாருக்கு சொந்தமான காணியில் மன்னார் மாந்தை திருக்கேதீஸ்வரம் பகுதியில் அமைக்கப்பட்ட சட்ட விரோதமான விகாரை திறப்பதற்கு தமிழ் மக்களின் வாக்குக்களால் தெரிவு செய்யப்பட்ட சனாதிபதியாகிய நீங்கள் உங்களை தெரிவு செய்த மக்களின் விருப்புக்கு மாறாக நீங்கள் திறப்பு விழாவிற்கு வருவது தார்மீக அடிப்படையில் நியாயம் அல்ல.... ஆகவே இதை திறப்பதற்கு மன்னாருக்கு வருகை தர வேண்டாம் என மன்னார் மாவட்ட பொது அமைப்புகளின் ஒன்றியம் ஐனாதிபதிக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளது.


இது விடயமாக மன்னார் மாவட்ட பொது அமைப்புகளின் தலைவர் வீ.எஸ்.சிவகரன் ஐனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில்
மன்னார் மாந்தை திருக்கேதீஸ்வரம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான 10 ஏக்கர் காணியில் சட்டவிரோதமாக பௌத்த கோவில் அமைக்க்பட்டு அதை எதிர்வரும் 29ந் திகதி திறப்பு விழா செய்வதற்காக ஐனாதிபதி மன்னாருக்கு வருகை தர இருப்பதை முன்னிட்டு மன்னார் பொது அமைப்புகளின் ஒன்றிய தலைவர் ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பிவைக்க்பட்டுள்ள கடிதத்தில்
மன்னார் மாந்தை திருக்கேதீஸ்வரம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான 10 ஏக்கர் காணியை அபகரித்து பௌத்த கோவில் அமைப்பது தானா நல்லாட்சி 1991ம் ஆண்டு திருக்கேதீஸ்வரம் பகுதியை இராணுவம் அபகரித்த போது தமது வழிபாட்டுக்கு என அமைக்கப்பட்டது தான் இந்த பௌத்த விகாரை 2009ற்கு பின்னர் இராணுவம் அங்கிருந்து பிரதான படை முகாமை அகற்றிய போதும் இந்த பௌத்த கோவிலையும், பௌத்த மதகுருவையும் பாதுகாப்பதற்கு சிறிய இராணுவமுகாம் அமைத்து பாதுகாத்து வருகிறது.
எனவே இராணுவத்தின் ஒத்துளைப்புடனே பௌத்த விகாரை அமைப்பு நடைபெறுகின்றது. வரலாற்றுப் புகழ்மிக்க திருக்கேதீஸ்வரம் சூழலில் இச் செயற்பாடு ஏற்புடையதா?  

18.01.2012ல் பௌத்த மத அலுவல்கள் திணைக்களம் இந்த விகாரையின் பதிவை இரத்து செய்ததுடன் கட்டுமானப்பணிகளையும் நிறுத்தியது.
ஆனால் உங்கள் நல்லாட்சியில்தான் மீண்டும் பணிகள் தொடங்கப்பட்டன. இது சட்ட விரோத சனநாயக மீறல் அல்லவா? இதுவா நல்லாட்சி? தமிழ் மக்களின் பூர்வீக வாழ்விடங்களில் கலாசார மாற்றத்தை ஏற்படுத்தி போலியான புனைவு பெயர்களின் மூலம் பௌத்த மயமாக்கல் வேலைத்திட்டத்தை முன்னகர்த்துகிறீர்களா?.

எப்படி கதிர்காமத்தை சிங்கள முருகன் ஆக்கினீர்களோ அதே போல் காலப்போக்கில் திருக்கேதீஸ்வரத்தை சிங்கள சிவனாக்கும் பணியைத் தொடங்கியிருக்கிறீர்களா?  இதுதானா பௌத்த தர்மம்?
புத்த பெருமானின் தர்ம சிந்னைக்கு எதிராக செயற்படுவது தான் இன்றைய பௌத்த சிந்தனையா? பாவம் புத்தர் உயிரோடு இருந்திருந்தால் உங்கள் எல்லோரையும் அழிந்துவிடுவார். புத்த பெருமானின் தர்ம சிந்தனைகள் உலக நீதிக்கு வழிகாட்டியது.

 ஆனால் இன்றைய பௌத்தம் இனச்சுத்திகரிப்பு செய்கிறது.
சட்ட விரோதமாக தனியாருக்கு சொந்தமான காணியில் அமைக்கப்பட்ட சட்ட விரோதமான விகாரை திறப்பதற்கு தமிழ் மக்களின் வாக்குக்களால் தெரிவு செய்யப்பட்ட சனாதிபதியாகிய நீங்கள் உங்களை தெரிவு செய்த மக்களின் விருப்புக்கு மாறாக நீங்கள் திறப்பு விழாவிற்கு வருவது தார்மீக அடிப்படையில் நியாயம் தானா?

ஏன் உங்கள் மனச்சாட்சியிடம் கேழுங்கள் தமிழ் மக்களின் அறம் சார்ந்த போராட்டத்தை தான் அடியோடு அழித்து விட்டீர்கள். இனம் சார்ந்த உணர்வையும் நசுக்கிவிடப்போகிறீர்களா?. நீங்கள் தமிழ் தலைமைகளை ஏமாற்றலாம் ஆனால் தமிழ் மக்களை ஏமாற்ற முடியாது. என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
.அவர்கள் உங்களை மன்னிக்க மாட்டார்கள் நீங்கள் உண்மையில் அறம் பேசுபவராக இருந்தால் சட்ட விரோத விகாரை திறப்பு விழாவிற்கு வருவது ஏற்புடையது அல்ல உடனடியாக பணிகளை நிறுத்த வேண்டும்.


 எக்காலத்திலும் பௌத்தர்கள் வசிக்காத இடத்தில் எதற்கு விகாரை? திருக்கேதீஸ்வரப் பகுதியில் தொல்லியல் திணைக்களத்தின் அனுமதியின்றி ஒரு சிறு குழியைக்கூட அகழ முடியாது ஆனால் விகாரை கட்டுவதற்கு யார் அனுமதித்தது இது தானா பௌத்த சனநாயகம் மேட்டிமை வாத மேலாதிக்கத்தை தான்தோன்றிதனமாக தமிழர் பிரதேசத்தில் இராணுவ உதவியுடன் செயற்படுத்திக்கொண்டு உலகத்தை ஏமாற்ற உதட்டளவு நல்லிணக்கம் பேசுகிறீர்களே! எப்படி நல்லிணக்கம் ஏற்படும்.
எனவே இந்த சட்ட விரோத விகாரை திறப்பு விழாவில் சனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட நீங்கள் கலந்து கொள்வது ஏற்புடையது அல்ல எமது நியாய பூர்வமான வேண்டுகையை புறக்கணித்து குறித்த திறப்புவிழா நடைபெற்றால் சனநாயக ரீதியில் கறுப்பு கொடியேந்தி முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்பதையும் தங்களிற்கு வினயமாகத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

மன்னாருக்கு வரவேண்டாம் ஐனாதிபதிக்கு எழுத்துமூலம் அறிவிப்பு.... Reviewed by Author on September 27, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.