அண்மைய செய்திகள்

recent
-

திலிபனே---நீ தியாகத்தின்...... தீ



தியாகத்தின் திருவுருவம் இவனே
தியாகத்தினை ஏற்றது இவனது பருவமே
சிந்தனைகள் எல்லாம்
சிகரம் தொட வேண்டும் என்றாய்

ஆயுதத்தினை களைந்த..... நீ
அகிம்சையினால் தாக்கினாய்-கொள்கை
குறிக்கோளை நோக்கினாய்
குமுறும் தமிழினத்தினைப்பார்க்கிறாய்

கோபம் கொண்டு கொதித்து எழுகிறாய்
கொஞ்ச நேரத்தில் பொறுமையாகிறாய்
கொண்ட கோரிக்கை நிறைவேறும் என-உன்
கொள்கையில் நிலைத்திருந்தாய்....

இந்தியாவும் சிந்திக்காமல் வந்து
இலங்கையரசுடன்  இணைந்து
ஈழத்தில் குடிகொண்டு  செய்த கொடுமை-நினைவுகளாய்
இன்னும் இதயத்தில் உண்டு

ஐக்கியத்திற்காய்  ஐயமின்றி...
ஐந்தம்சக் கோரிக்கையால்-அகிம்சையின்
ஐயனான  மகாத்துமா காந்தி  நாட்டிற்கே..பாடம் புகட்டியதால்
ஐக்கிய நாடுகள் சபை வரை.....

ஊரெழு தந்த  உத்தமனே-தாயக
உணர்வுடன் அகிம்சை வழிகண்ட நாயகனே
உரிமைக்காய் ஊண் உறக்கமின்றி
உயிர் தந்த காவலனே .....

பார்த்தீபன் இராசையாவே -நீ
பார்க்க விரும்பிய தமிழீழம்-நாமும் இன்னும்
பார்க்கவில்லை ஆனாலும் தோர்க்கவில்லை
பார்ப்போம் விரைவில்  பரவசக்கரையில்....

-தமிழ்மாடு-
ஈழத்திற்காய் விதைக்கப்பட்டுள்ள வித்துக்கள்
ஈழம் மலரும் போது விருட்சமாகும்


பார்த்தீபன் இராசையா(திலிபன்)
யாழ்ப்பாணம் ஊரெழு
பிறப்பு-  27-09 - 1963
உண்ணாவிரதம்- 15-09-1987
இறப்பு 26- 09-1987


திலிபனே---நீ தியாகத்தின்...... தீ Reviewed by Author on September 16, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.