அண்மைய செய்திகள்

recent
-

தற்கொலைக்கு காட்டும் தைரியத்தை, வாழ்வதற்கு ஏன் காட்டக்கூடாது?: வைரமுத்து அறிக்கை


தமிழ்ச் சமூகத்துத் தங்கங்களே தற்கொலைக்குக் காட்டும் தைரியத்தை, வாழ்வதற்கு ஏன் காட்டக்கூடாது? என்று கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.

மாணவி அனிதா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

‘அடி பாவி மகளே’
என்று நெஞ்சு பதறுகிறது. அனிதாவின் தற்கொலையும் சமூக நீதியின் கொலையும் ஒரே தருணத்தில் நிகழ்ந்திருக்கின்றன. ஒட்டுமொத்த நிகழ்காலமும் இந்தத் தற்கொலைக்குப் பொறுப்பேற்க வேண்டும்.

மொத்தம் மரணம் மூன்று வகை.

  • இயல்பான மரணம்-அது மனிதன் மீது இயற்கை காட்டும் எதிர்ப்பு;
  • இன்னொன்று கொலை-அது மனிதன் மீது மனிதன் காட்டும் எதிர்ப்பு;
  • மூன்றாவது தற்கொலை-அது மனிதன் சமூகத்தின் மீது காட்டும் எதிர்ப்பு.

அநீதிக்கு எதிரான போர்க்களத்தில் இப்போது ஒரு போராளியை இழந்து நிற்கிறோம். ஆழ்ந்த அனுதாபங்களை யாருக்குச் சொல்வது?

தமிழ்ச் சமூகத்துத் தங்கங்களே தற்கொலைக்குக் காட்டும் தைரியத்தை, வாழ்வதற்கு ஏன் காட்டக்கூடாது? தற்கொலை தீர்வல்ல; வாழ்வுதான் தீர்வு.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தற்கொலைக்கு காட்டும் தைரியத்தை, வாழ்வதற்கு ஏன் காட்டக்கூடாது?: வைரமுத்து அறிக்கை Reviewed by Author on September 03, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.