அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் தேவன் பிட்டி கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்ட ஆராம்ப பாடசாலையினை வடமாகாண கல்வி அமைச்சர் கே.சர்வேஸ்வரன் -வைபவ ரீதியாக திறந்துவைப்பு-படம்


மடு வலயக்கல்விப்பணிமனைக்குற்பட்ட தேவன் பிட்டி கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்ட மன்-தேவன் பிட்டி ஆராம்ப பாடசாலையினை வடமாகாண கல்வி அமைச்சர் கே.சர்வேஸ்வரன் இன்று புதன் கிழமை (25) மதியம் வைபவ ரீதியாக திறந்து வைத்தார்.

மடு வலயக்கல்விப்பணிப்பாளர் திருமதி மாலினி வெனிட்டன் தலைமையில் இடம் பெற்ற குறித்த நிகழ்வின் போது வடமாகாண கல்வி அமைச்சர் கே.சர்வேஸ்வரன் கலந்து கொண்டு வைபவ ரீதியாக திறந்து வைத்தார்.

ஜப்பான் அரசின் நிதி உதவியுடன் யூ.என்.கெபிட்டா நிறுவனத்தின் அமுலாக்கத்துடன் குறித்த ஆரம்ப பாடசாலை அமைக்கப்பட்டுள்ளது.இதன் போடு யூ.என்.கெபிட்டா நிறுவனத்தின் பிரதி நிதிகள்,பாடசாலை அதிபர்,ஆசிரியர்கள்,மாணவர்கள் மற்றும் பெற்றோர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.










மன்னார் தேவன் பிட்டி கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்ட ஆராம்ப பாடசாலையினை வடமாகாண கல்வி அமைச்சர் கே.சர்வேஸ்வரன் -வைபவ ரீதியாக திறந்துவைப்பு-படம் Reviewed by NEWMANNAR on October 25, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.