அண்மைய செய்திகள்

recent
-

கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட போட்டியில் மன்னார் மாணவர்கள் வெற்றி

கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களத்தினால் இலங்கை முழுவதிலும் உள்ள 12 மறை மாவட்டங்களிற்குமான போட்டிகள் கொழும்பு வெஸ்லி கல்லூரியில் கடந்த வியாழக்கிழமை(05)நடை பெற்றது.

குறித்த போட்டியில் கீழ் பிரிவு பேச்சுப் போட்டியில் மன்னாரைச் சேர்ந்தவர்களான செல்வி லூயிஸ் விமலன் எஸ்வின் நிதிஸ்கா முதலாம் இடத்தினையும் , மேற் பிரிவு பேச்சுப் போட்டியில் செல்வி லக்சியா மிராண்டா இரண்டாம் இடத்தினையும் வினாவிடைப் போட்டியில் மேற் பிரிவைச் சேர்ந்த மாணவர் குழு இரண்டாம் இடத்தினையும் பெற்று மன்னார் மறை மாவட்டத்திற்கு பெருமையைதேடிக்கொடுத்துள்ளனர்.



கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட போட்டியில் மன்னார் மாணவர்கள் வெற்றி Reviewed by NEWMANNAR on October 07, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.