அண்மைய செய்திகள்

recent
-

விபத்தில் ஏழு வயது சிறுவன் உயிரிழப்பு -


வீதியைக் கடக்க முயன்ற சிறுவனை இ.போ.ச பேருந்தில் மோதியதில் 07 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் ஒன்று திருகோணமலை -ஹொரவ்பொத்தானை பிரதான வீதி மஹதிவுல்வெவ குளத்துக்கு அருகில் இன்று இடம்பெற்றது.

யாழ்ப்பாணம்-சாவகச்சேரி மீசாலை பகுதியைச்சேர்ந்த நகுலன் தசுதரண் (வயது 7) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்தார்.
மேற்படி சிறுவன் வீதியை கடக்க முற்பட்டபோது வவுனியாவிலிருந்து திருகோணமலை நோக்கி வந்த இ.போ.ச பஸ்ஸில் மோதுண்டு உயிரிழந்துள்ளாரென பொலிஸார் தெரிவித்தனர்.

பிரேத பரிசோதனைக்காக மொறவெவ வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.
விபத்துடன் தொடர்புடைய பேருந்தின் சாரதியை கைதுசெய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை
மேற்கொண்டு வருகின்றனர்.
விபத்தில் ஏழு வயது சிறுவன் உயிரிழப்பு - Reviewed by Author on November 10, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.