அண்மைய செய்திகள்

recent
-

மடு இரணை இலுப்பைக்குளம் ஆரம்ப சுகாதார பராமறிப்பு நிலையத்தில் மக்களுக்கு சிகிச்சை வழங்கிய சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன்.(படம்)

மடு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட இரணை இலுப்பைக்குளம் ஆரம்ப சுகாதார பராமறிப்பு நிலையத்திற்கு நேற்று
(29-11-2017) செவ்வாய்க்கிழமை காலை திடீர் விஜயத்தை மேற்கொண்டிருந்த வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் அங்கு சிகிச்சைக்காக வருகைதந்திருந்த மக்களுக்கு மருத்துவ பரிசோதனை மற்றும்,சிகிச்சை வழங்கிய சம்பவம் இடம் பெற்றுள்ளது.

-இரணை இலுப்பைக்குளம் ஆரம்ப சுகாதார பராமறிப்பு நிலையத்தில் உள்ள குறைபாடுகளை பார்வையிடுவதற்காக சென்ற சுகாதார அமைச்சர்,அங்கு சிகிச்சை பெற்றுக்கொள்ள மக்கள் அதிகமாக காணப்பட்ட நிலையில் அங்கு நின்ற மக்களுக்கு உடனடியாக மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைகளை வழங்கியுள்ளார்.

-பின் தங்கிய கிராமங்களில் ஒன்றான இரணை இலுப்பைக்குளம் கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார பராமறிப்பு நிலையம் பல்வேறு அடிப்படை வசதிகள் இன்றி இயங்கி வருகின்றது.

இனினும் குறித்த சுகாதார பராமறிப்பு நிலையத்தில் கடமையாற்றுகின்ற வைத்தியர் அடிப்படை வசதிகள் இன்றி சேவையாற்றி வருகின்றார்.

-இந்த நிலையிலே   குறித்த சுகாதார பராமறிப்பு நிலையத்தில் உள்ள குறைபாடுகளை நேரடியாகச் சென்று பார்வையிடுவதற்காக அங்கு நேரடியாக விஜயம் செய்த சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் மக்களை நீண்ட நேரம் காத்து நிற்க விடாது மக்களுக்கு மருத்துவ பரிசோதனை மற்றும்,சிகிச்சை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 







மடு இரணை இலுப்பைக்குளம் ஆரம்ப சுகாதார பராமறிப்பு நிலையத்தில் மக்களுக்கு சிகிச்சை வழங்கிய சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன்.(படம்) Reviewed by Author on November 29, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.