ஆசிரியராக வேலை பார்த்த நீதா அம்பானி: வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
இவர், மும்பையின் புறநகர் பகுதியில் நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர்.
வணிகவியலில் பட்டம் பெற்ற நீதா அம்பானி, ஒரு தனியார் பள்ளியில் சிறு குழந்தைகளுக்கு பாடம் நடத்தி வந்தார். பரத நாட்டியம் கற்றுக் கொண்ட நீதா, பல நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அரங்கேற்றம் செய்துள்ளார்.
அவ்வாறான நாட்டிய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட முகேஷ் அம்பானியின் தந்தை திருபாய் அம்பானி, நீதாவின் நாட்டியத்தினை பார்த்து தன் மகனுக்கு அவரை திருமணம் செய்து வைக்க நினைத்தார்.
அப்போது ஆசிரியையாக பணி புரிந்துகொண்டிருந்த நீதா, திருமணத்திற்கு பிறகும் தனது பணியை தொடர்ந்தார். அவரின் பணியின் மீதான பேரார்வத்தை கண்ட முகேஷ் அம்பானி, நீதாவினை ஆசிரியை பணியை தொடரச் சொன்னார்.
1987ஆம் ஆண்டு நடந்த உலக கிண்ண கிரிக்கெட் போட்டியின்போது, நீதாவின் மாணவர்களில் ஒருவனின் பெற்றோர் போட்டிக்கான நுழைவுச்சீட்டினை நீதாவிற்கு அளித்துள்ளனர்.
ஆனால், அவர் அதனை வாங்க மறுத்து விட்டார். மேலும், விஐபிகளுக்கான இருக்கையில் அமர்ந்து போட்டியினை பார்த்த நீதாவினைக் கண்ட பின்பு தான் அந்த பெற்றோருக்கு தெரிந்தது நீதா, அம்பானி குடும்பத்தின் மருமகள் என்று.
சில ஆண்டுகளுக்கு பிறகு தனது ஆசிரியர் வேலையை விட்ட நீதா அம்பானி, ரிலையன்ஸ் குழுமத்தில் இணைந்தார். சமீபத்திய பேட்டி ஒன்றில் முகேஷ் அம்பானி கூறுகையில்,
எனது மனைவி ஆசிரியராக இருந்ததால், இப்போது அதிக நேரம் கற்பித்தலில் செலவழிப்பதாக கூறுவார். நாங்கள் இருவரும் இனி வரும் ஆண்டுகளில் கல்வித்துறையில் கால் பதிக்க உள்ளோம். இது எங்களின் மனநிறைவுக்காக மட்டுமே என அவர் தெரிவித்துள்ளார்.
நீதா அம்பானி ஆசிரியையாக பணியாற்றிய போது அவர் வாங்கிய சம்பளம் ரூ.800 ஆகும். தற்போது மும்பையில் திருபாய் அம்பானி என்ற பள்ளியை நடத்தி வருகிறார்கள். இதன் நிறுவனராக நீதா அம்பானி இருக்கிறார்.
ஆசிரியராக வேலை பார்த்த நீதா அம்பானி: வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
Reviewed by Author
on
November 16, 2017
Rating:
No comments:
Post a Comment