பேசாலை புனித வெற்றி நாயகி விளையாட்டு மைதான நிர்மானிப்பணிக்கு அடிக்கல் நாட்டி வைப்பு-(படம்)
வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதனின் குறித்தொதுக்கீட்டு நிதி உதவியின் கீழ் பேசாலை புனித வெற்றி நாயகி விளையாட்டு மைதான நிர்மானிப்பணிகளுக்காக சுமார் 15 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் அதன் ஆரம்ப நிகழ்வுகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்றது.
இதன் போது வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன், மேலதிக நிதி வழங்குனரான வடமாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி பிரிமூஸ் சிறாய்வா, ஆகியோர் இணைந்து அடிக்கல்லினை நாட்டி வைத்து பணிகளை ஆரம்பித்து வைத்தனர்.
குறித்த அடிக்கல் நாட்டும் நிகழ்வில் பேசாலை பங்குத்தந்தை, அருட்பனி பேரவை பிரதி நிதிகள் ,வெற்றி நாயகி விளையாட்டுக்கழக வீரர்கள், உற்பட பேசாலை கஜராம மக்கள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
பேசாலை புனித வெற்றி நாயகி விளையாட்டு மைதான நிர்மானிப்பணிக்கு அடிக்கல் நாட்டி வைப்பு-(படம்)
Reviewed by Author
on
November 20, 2017
Rating:
No comments:
Post a Comment