அண்மைய செய்திகள்

recent
-

தனியார் பேரூந்து விபத்து : நால்வர் காயம்......


தனியார் பேரூந்து விபத்து நால்வர் காயம் வவுனியா கல்குன்டாமடு பூவேபாலத்திற்கு அருகே இன்று (03.11.2017) அதிகாலை 3.00 மணியளவில் இடம்பெற்ற தனியார் பேரூந்து விபத்தில் நால்வர் காயமடைந்துள்ளதாக ஈரட்டை பெரியகுளம் பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த தனியார் பேரூந்து கல்குன்டாமடு பூவே பாலத்திற்கு அருகே சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது. இவ் விபத்தில் பேரூந்தில் பயணித்த பயணிகள் நால்வர் காயமடைந்துள்ளனர்.

 சாரதியின் தூக்கமின்மையே இவ் விபத்து இடம்பெற காரணமாக இருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துடன் மேலதிக விசாரணைகளை ஈரட்டைபெரியகுளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





தனியார் பேரூந்து விபத்து : நால்வர் காயம்...... Reviewed by Author on November 03, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.