மன்னாரில் நீர் விநியோகம் தடை... சனிக்கிழமை....09.12.2017
மன்னார் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் வழங்கப்படும் நீர் வழங்கல் சனிக்கிழமை (09.12.2017) ஒரு நாளைக்கு விநியோகத்தில் தடையேற்படும் என மன்னார் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது
.
தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் முன்னெடுக்கப்படுகின்ற உலர்வலய நகர நீர் மற்றும் சுகாதார திட்டத்துக்கு அமைவாக மன்னார் பிரதேசத்தில் பிரதான நீர் விநியோக குழாய்கள் பராமரிப்பு மற்றும் திருத்த வேலைகள் மேற்கொள்ளப்படுவதால் மன்னார் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் நீர் வழங்கப்படும் மன்னார் நகரம், வங்காலை, தாழ்வுபாடு, எருக்கலம்பிட்டி, தோட்டவெளி, கரிசல், திருக்கேதீஸ்வரம், அடம்பன் ஆகிய பகுதிகளுக்கே நீர் வழங்கல் ஒரு நாளைக்கு தடைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
.
சனிக் கிழமை (09.12.2017) காலை 09 மணி தொடக்கம் மாலை 05 வரை இவ் நீர் விநியோகம் தடைப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னாரில் நீர் விநியோகம் தடை... சனிக்கிழமை....09.12.2017
Reviewed by Author
on
December 08, 2017
Rating:
No comments:
Post a Comment