100 பேரின் உயிரை பறித்த புயல் -வெள்ளத்தில் மிதக்கும் கிராமங்கள்:
பிலிப்பைன்ஸ் தென் பகுதியை ஆண்டுதோறும் சுமார் 20 புயல்கள் தாக்கி வருகின்றன.
இந்நிலையில் நேற்று டெம்பின் என்ற வெப்பமண்டல புயலால் மிண்டானாவ் தீவை கடுமையாக தாக்கியது.
சுமார் 80 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசியதுடன் பெருமழையும் பெய்ததால் பல கிராமங்கள் நீரில் மூழ்கின.
தாழ்வான பகுதிகளில் வசித்த சுமார் 12,000 மக்கள் பாதுகாப்பான பகுதியில் தங்கவைக்கப்பட்டனர்.
சில கிராமங்களில் வீடுகள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டன, தற்போது நிலவரப்படி 100 பேர் பலியானதாக மீட்புப்படையினர் தெரிவித்துள்ளனர்.
100 பேரின் உயிரை பறித்த புயல் -வெள்ளத்தில் மிதக்கும் கிராமங்கள்:
Reviewed by Author
on
December 24, 2017
Rating:
No comments:
Post a Comment