அண்மைய செய்திகள்

recent
-

ஓமந்தையில் சிறுமி துஷ்பிரயோகம் சந்தேகத்தில் ஒருவர் கைது

வவுனியா ஓமந்தையில் 16வயது சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் சந்தேகத்தில் ஒருவர் கைது வவுனியா ஓமந்தை பகுதியிலுள்ள 16வயதுடைய சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், வவுனியா ஓமந்தை மாளிகை நொச்சிக்குளம் கனிஷ்ட உயர்தரம் பாடசாலையை சேர்ந்த 16வயதுடைய சிறுமியின் வீட்டிற்குச் சென்று நல்லுறவுடன் பழகிய அப்பாடசாலையின் ஆசிரியரான வவுனியா தோணிக்கள் பகுதியை சேர்ந்த 50 வயதுடைய குமாரசிங்கம் இந்திரசிங்கம் என்ற ஆசிரியரே இவ்வாறு 16வயதுடைய சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் மாணவி வயிற்று வலி என வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட வேளை குறித்த மாணவி கர்ப்பம் என அறியவந்துள்ளதை அடுத்து கடந்த 29.11.2017 அன்று ஓமந்தை பொலிஸாரிடம் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்தும் நேற்றைய தினம் குறித்த மாணவியின் வாக்குமூலத்தையடுத்தும் சந்தேக நபரான ஆசிரியரை இன்று அதிகாலை தோணிக்கள் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டு இன்று நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் விளக்கமறியலிலும் வைக்கப்பட்டுள்ளார்.

ஓமந்தையில் சிறுமி துஷ்பிரயோகம் சந்தேகத்தில் ஒருவர் கைது Reviewed by Author on December 07, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.