ஜெர்மனியில் சரக்கு ரயிலுடன் பயணிகள் ரயில் நேருக்கு நேர் மோதல்: 8 பேர் பலி
பெர்லின்: தெற்கு ஜெர்மனியில் 2 ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். சுமார் 100 பேர் காயம் அடைந்துள்ளனர். முனிச் நகரில் இருந்து தென் கிழக்கே சுமார் 60 கி.மீ. தொலைவில் பேட் ஏப்ளிங் என்ற இடத்துக்கு அருகில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. எதிர்பாராதவிதமாக பயணிகள் ரயிலுடன் டிபி கார்கோ என்ற மற்றொரு சரக்கு ரயிலும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்து குறித்து பிராந்திய ரயில் நிறுவனமான மெரிடியன் விடுத்துள்ள அறிக்கையில், ரோஸனீம் - ஹோல்ஸ்கிர்சென் இடையிலான ஒற்றைப் பாதையில் காலை 7 மணியளவில் இந்த விபத்து நேர்ந்துள்ளது” என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் விபத்துக்கான காரணம் தெரியவில்லை.
விபத்தைத் தொடர்ந்து பல பெட்டிகள் சேதம் அடைந்துள்ளது. சேதமடைந்த பெட்டிகளில் இருந்து பயணிகளை மீட்கும் பணியில் நூற்றுக்கணக்கானோர் ஈடுப்பட்டனர். மீட்புப் பணியில் 10-க்கும் மேற்பட்ட ஹெலிகாப்டர்களும் ஈடுபடுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஜெர்மனியில் சரக்கு ரயிலுடன் பயணிகள் ரயில் நேருக்கு நேர் மோதல்: 8 பேர் பலி
Reviewed by Author
on
December 06, 2017
Rating:
No comments:
Post a Comment