விம்பம் பகுதியில் மறைந்தும் மறையாத மாணிக்கம்.......அ.லூக்காஸ் (யோகராஜ)
மன்னாரின் கடல் வளம் சிறந்து மனிதவளம் செழிப்புற்று விளங்கும் நல்லூராம் விடத்தல் தீவில் 1947-08-23 திரேசம்மா பிலிப்பு அடைக்கலம் என்பவர்களின் ஏழு பிள்ளைகளில் இரண்டாவதாக பிறந்தார்.
- பாடல் இயற்றுதல்
- நாடகம் எழுதுதல்
- ஆற்றுகை செய்தல்
- சிற்பவேலைப்பாடுகள்
செய்தல் மூலம் கலைப்பணியாற்றியுள்ளார்.
1970-05-20 நாளில் அந்தோனியாப்பிள்ளை என்பவரை அடம்பன் புனித வியாகுலமாதா ஆலயத்தில் வைத்து மணமுடித்தார் சந்தோஷமான வாழ்வின் வெளிப்பாடாய் ஆறு பிள்ளைகள் உள்ளனர்
- திருந்திய உள்ளம்
- மீனாட்சி திருமணம்
- வள்ளி திருமணம்
காத்தவராயன் கூத்து ஆகிய நாடகங்களை எழுதி சாளம்பன் தேவன்பிட்டி இலுப்பக்கடவை பெரியமடு தட்சனாமருதமடு போன்ற கிராமங்களில் புதிய கலைஞர்களுக்கு பழக்கி மேடையேற்றியமை.
இவரின் கைவண்ணத்தில் சில
- சிற்பம்-1994ம் ஆண்டு தேவன்பிட்டி புனித சவேரியார் ஆலயத்தில் உள்ள புனித சவேரியார் மரச்சிலையினை செதுக்கியுள்ளார்.
- மரச்செதுக்கல்-ஜோசப்வாஸ் நகரில் உள்ள இருவீடுகளில் இயேசுவின் இராப்போசனம் நிகழ்வு அப்பம் பிட்கும் காட்சிகளை மிகவும் தத்துரூபமாக வேப்பம் பலகையில் செதுக்கி கொடுத்துள்ளார்.
- சிற்பம்- விடத்தல்தீவு புனித யாகப்பர் ஆலயத்தில் புனித யாகப்பர் திருச்சுருவம் செதுக்கியமை
- வள்ளுவர் சிலை அமைத்தல் -பொதுநூலகம் மன்னார்
- ஆறுமுகநாவலர் சிலை அமைத்தல் -மன்.சித்திவிநயாயகர் இந்துக்கல்லூரி
குறிப்பு- மேலே குறிப்பிட்டவை தற்போது உள்ள சிலைகள் புதிதாய் அமைத்துள்ளனர்.
மறைந்தாலும் மறையாமல் தன்னுடைய கலையினால் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார்.
நியூமன்னார் இணையத்தின் தேடல் தொடரும் கலைஞர்களின் முகம் மலரும்…
நியூமன்னார் இணையத்தின் தேடல் தொடரும் கலைஞர்களின் முகம் மலரும்........
விம்பம் பகுதியில் மறைந்தும் மறையாத மாணிக்கம்.......அ.லூக்காஸ் (யோகராஜ)
Reviewed by Author
on
December 13, 2017
Rating:
No comments:
Post a Comment