அண்மைய செய்திகள்

recent
-

மன்னார்புனித சவேரியார் பெண்கள் தேசிய கல்லூரி மாணவி M.மேரிஸ்ரெல்லா வர்த்தகப்பிரிவில் மாவட்ட ரீதியில் 3ம் இடம்.

க.பொ.த. உயர்தர பரீட்சை பெறுபேறுகள் பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.

இம்முறை இணையத்தில் வெளியாகியுள்ள பரீட்சை முடிவுகளுக்கமைய
 உயர்தர பரீட்சை பெறுபேறுகளுக்கமைய
மன்னார் மாவட்டத்தின் புனித சவேரியார் பெண்கள் தேசிய கல்லூரி மாணவி  மரியான் மரிஸ்ரெலா வர்த்தகப்பிரிவில் 03ம் இடத்தினை மாவட்ட ரீதியில் பெற்றுள்ளார்.

இவர் மரியான் வதனி தம்பதிகளின் புதல்வியும்  அத்தோடு இவரது சகோதரன் செல்வன் M.அன்ரனிஸ் கடந்த 2010 ம் ஆண்டில் வர்த்தகப்பிரிவில் மாவட்டத்தில் 10ம் இடத்தினை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மாவட்ட ரீதியில் 3ம் இடம் பெற்ற மரியான் மேரிஸ்ரெல்லா மாணவியிடம் எதிர்கால இலக்கு என்று வினவியபோது...

தனது இலக்கு சிறந்த கணக்காளராக வரவேண்டும் என்பதே
அத்துடன் தான் இந்நிலைக்கு முன்னேறக் காரணமாய் இருந்த  ஆசிரியர்கள் அதிபர் நண்பர்கள் குறிப்பாக பெற்றோர் சகோதரர்கள்  அனைவருக்கும் எனது நன்றிகள் விசேட விதமாக எல்லாம் வல்ல இறைவனின் ஆசீர்வாதமும் பெற்றோர்களின் ஆசீர்வாதமும் தான்.

 இம்மாணவியையும் ஆசிரியர்கள் அதிபர் பெற்றோர் அனைவரையும்
நியூமன்னார் இணையக்குழுமம்  சார்பாக வாழ்த்தி நிற்கின்றோம்.

 தொகுப்பு- கஜேந்திரன்-
மன்னார்புனித சவேரியார் பெண்கள் தேசிய கல்லூரி மாணவி M.மேரிஸ்ரெல்லா வர்த்தகப்பிரிவில் மாவட்ட ரீதியில் 3ம் இடம். Reviewed by Author on December 28, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.