அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் பிரதான பாலத்தில் தொடர்ச்சியாக கால்நடைகளின் நடமாட்டம் அதிகரிப்பு-(படம்)


மன்னார் பிரதான பாலத்தில் தொடர்ச்சியாக கால்நடைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுவதினால் மக்கள் தொடர்ச்சியாக பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுகின்றது.

தற்போது விவசாய செய்கை இடம் பெற்று வருகின்ற நிலையில் நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவு மற்றும் அதனை அண்டிய கிராமங்களில் உள்ள கல் நடைகளை மாந்தை மேற்கு பிரதேச்ச செயலாளர் பிரிவுக்கற்பட்ட பாலியாறு மற்றும் அதனை அண்டிய இடங்களில் உள்ள மேச்சல் தரவைகளுக்கு கால்நடை வளர்ப்பாளர்களினால் அனுப்பப்பட்ட நிலையில், விவசாயிகளின் விவசாயச் செய்கைகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் மன்னார் தீவுக்கு வெளியில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த கால்நடை வளர்ப்பாளர்களின் மடுகள் மற்றும் எருமை மாடுகள் அதிகலவில் கூட்டம் கூட்டமாக மன்னார் பிரதான பாலத்தினூடாக மன்னாரினுள் வருகின்றது.

இரவு பகல் பாராது தொடர்ச்சியாக மன்னார் பிரதான பாலத்தில் கால்நடைகளின் நடமாட்டம் அதிகரித்தமையினால் விபத்துக்கள் ஏற்படுவதோடு, மோட்டார் சைக்சில் மற்றும் வாகனங்களில் பயணங்களை மேற்கொள்ளும் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.


எனவே உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தி மன்னார் பிரதான பாலத்தில் கால் நடைகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தி விபத்துக்களை தவிர்க்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மக்கள் உரிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.








மன்னார் பிரதான பாலத்தில் தொடர்ச்சியாக கால்நடைகளின் நடமாட்டம் அதிகரிப்பு-(படம்) Reviewed by Author on December 06, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.