மன்னார் பேசாலை கடற்பரப்பில் காணாமல் போன மீனவர்களில் ஒருவர் இராமேஸ்வர மீனவர்களினால் மீட்பு-மேலும் ஒருவரை காணவில்லை. ( ,PHOTOS)
மன்னார் பேசாலை காட்டாஸ்பத்திரி துறை பகுதியில் இருந்து நேற்று சனிக்கிழமை(16) காலை மீன் பிடிக்க கடலுக்குச் சென்ற மீனவர்களின் படகு கடலில் மூழ்கிய நிலையில்,உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த மீனவர் ஒருவரை இராமேஸ்வர மீனவர்கள் மீட்டு இரமேஸ்வர பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
-இராமேஸ்வர மீனவர்களினால் மீட்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட மீனவர் மன்னார் பேசாலை 7 ஆம் வட்டாரம் முருகன் கோவில் பகுதியைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான அந்தோனி மரியதாஸ்(வயது-37) என தெரிய வந்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,,,
-மன்னார் பேசாலை 7 ஆம் வட்டாரம் முருகன் கோவில் பகுதியைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான அந்தோனி மரியதாஸ் (வயது-37) மற்றும்,சிறுத்தோப்பு பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான சம்சிங் அன்ரன் (வயது-23) ஆகிய இரு மீனவர்களும் நேற்று (16) சனிக்கிழமை காலை 5.30 மணியளவில் காட்டாஸ்பத்திரி துறை பகுதியில் இருந்து படகு ஒன்றில் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளனர்.
இந்த நிலையில் குறித்த மீனவர்கள் தாம் செல்ல வேண்டிய பகுதிக்கு செல்லும் முன் குறித்த மீனவர்களின் படகு கடலில் மூழ்கியுள்ளது.
இதன் போது குறித்த இரு மீனவர்களும் கடலில் உயிருக்கு போராடியுள்ளனர்.
இந்த நிலையில் குறித்த பகுதிக்கு வந்த இராமேஸ்வர மீனவர்கள் கடலில் தத்தழித்துக்கொண்டிருந்த மீனவரான அந்தோனி மரியதாஸ்(வயது-37) என்பவரை கண்ட நிலையில் உடனடியாக குறித்த மீனவரை காப்பாற்றி இராமேஸ்வர பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
எனினும் மற்றறைய மீனவரான சம்சிங் அன்ரன் (வயது-23) காணாமல் போயுள்ளார்.
இந்த நிலையில் தொழிலுக்குச் சென்ற குறித்த மீனவர்கள் இருவரும் வீடு திரும்பவில்லை என அவரது உறவினர்கள் நேற்று சனிக்கிழமை(16) மாலை பேசாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.
இந்த நிலையிலே காணமால் போன மீனவர்களில் ஒருவரான மன்னார் பேசாலை 7 ஆம் வட்டாரம் முருகன் கோவில் பகுதியைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான அந்தோனி மரியதாஸ்(வயது-37) இராமேஸ்வர மீனவர்களினால் காப்பாற்றப்பட்டு இராமேஸ்வரம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட விடையம் தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை(17) காலை முதல் அப்பிரதேச மீனவர்கள் கடற்படையுடன் இணைந்து காணாமல் போன மீனவரான சிறுத்தோப்பு பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான சம்சிங் அன்ரன் (வயது-23) என்பவரை தேடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
-இராமேஸ்வர மீனவர்களினால் மீட்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட மீனவர் மன்னார் பேசாலை 7 ஆம் வட்டாரம் முருகன் கோவில் பகுதியைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான அந்தோனி மரியதாஸ்(வயது-37) என தெரிய வந்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,,,
-மன்னார் பேசாலை 7 ஆம் வட்டாரம் முருகன் கோவில் பகுதியைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான அந்தோனி மரியதாஸ் (வயது-37) மற்றும்,சிறுத்தோப்பு பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான சம்சிங் அன்ரன் (வயது-23) ஆகிய இரு மீனவர்களும் நேற்று (16) சனிக்கிழமை காலை 5.30 மணியளவில் காட்டாஸ்பத்திரி துறை பகுதியில் இருந்து படகு ஒன்றில் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளனர்.
இந்த நிலையில் குறித்த மீனவர்கள் தாம் செல்ல வேண்டிய பகுதிக்கு செல்லும் முன் குறித்த மீனவர்களின் படகு கடலில் மூழ்கியுள்ளது.
இதன் போது குறித்த இரு மீனவர்களும் கடலில் உயிருக்கு போராடியுள்ளனர்.
இந்த நிலையில் குறித்த பகுதிக்கு வந்த இராமேஸ்வர மீனவர்கள் கடலில் தத்தழித்துக்கொண்டிருந்த மீனவரான அந்தோனி மரியதாஸ்(வயது-37) என்பவரை கண்ட நிலையில் உடனடியாக குறித்த மீனவரை காப்பாற்றி இராமேஸ்வர பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
எனினும் மற்றறைய மீனவரான சம்சிங் அன்ரன் (வயது-23) காணாமல் போயுள்ளார்.
இந்த நிலையில் தொழிலுக்குச் சென்ற குறித்த மீனவர்கள் இருவரும் வீடு திரும்பவில்லை என அவரது உறவினர்கள் நேற்று சனிக்கிழமை(16) மாலை பேசாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.
இந்த நிலையிலே காணமால் போன மீனவர்களில் ஒருவரான மன்னார் பேசாலை 7 ஆம் வட்டாரம் முருகன் கோவில் பகுதியைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான அந்தோனி மரியதாஸ்(வயது-37) இராமேஸ்வர மீனவர்களினால் காப்பாற்றப்பட்டு இராமேஸ்வரம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட விடையம் தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை(17) காலை முதல் அப்பிரதேச மீனவர்கள் கடற்படையுடன் இணைந்து காணாமல் போன மீனவரான சிறுத்தோப்பு பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான சம்சிங் அன்ரன் (வயது-23) என்பவரை தேடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் பேசாலை கடற்பரப்பில் காணாமல் போன மீனவர்களில் ஒருவர் இராமேஸ்வர மீனவர்களினால் மீட்பு-மேலும் ஒருவரை காணவில்லை. ( ,PHOTOS)
Reviewed by Author
on
December 17, 2017
Rating:
No comments:
Post a Comment