மன். புனித பத்திமா மத்திய மகா வித்தியாலயத்தின் மாணவன் செல்வன் S.தனுசன் மாவட்ட ரீதியில் 02ம் இடம்
க.பொ.த. உயர்தர பரீட்சை பெறுபேறுகள் பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.
இம்முறை இணையத்தில் வெளியாகியுள்ள பரீட்சை முடிவுகளுக்கமைய
உயர்தர பரீட்சை பெறுபேறுகளுக்கமைய
மன்னார் மாவட்டத்தின் மன். புனித பத்திமா மத்திய மகா வித்தியாலயத்தின் மாணவன் செல்வன் S.தனுசன் வர்த்தகப்பிரிவில் 02ம் இடத்தினை மாவட்ட ரீதியில் பெற்றுள்ளார்.
இவர் சிவபாலசுந்தரம் மனோன்மணி தம்பதிகளின் புதல்வனாவார்
மாவட்ட ரீதியில் 02ம் இடம் பெற்ற மாணவன் செல்வன் S.தனுசனிடம் எதிர்கால இலக்கு என்று வினவியபோது...
தனது இலக்கு சிறந்த கணக்காளராக (ACCA)வரவேண்டும் என்பதே
அத்துடன் தான் இந்நிலைக்கு முன்னேறக் காரணமாய் இருந்த ஆசிரியர்கள் அதிபர் நண்பர்கள் குறிப்பாக பெற்றோர் சகோதரர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள் விசேட விதமாக எல்லாம் வல்ல இறைவனின் ஆசீர்வாதமும் பெற்றோர்களின் ஆசீர்வாதமும் தான்.
இம்மாணவன் செல்வன் S.தனுசனையும் ஆசிரியர்கள் அதிபர் பெற்றோர் அனைவரையும்
நியூமன்னார் இணையக்குழுமம் சார்பாக வாழ்த்தி நிற்கின்றோம்.
ஏனைய பரீட்சை முடிவுகளை உடனுக்குடன் நியூமன்னார் இணையத்தில் எதிர்பாருங்கள்
தொகுப்பு- கஜேந்திரன்-
மன். புனித பத்திமா மத்திய மகா வித்தியாலயத்தின் மாணவன் செல்வன் S.தனுசன் மாவட்ட ரீதியில் 02ம் இடம்
Reviewed by Author
on
December 28, 2017
Rating:
No comments:
Post a Comment