அண்மைய செய்திகள்

recent
-

தமிழ் தேசிய அரசியலுக்கு முடிவு கட்டுகின்ற தர்ம யுத்தம் ஆரம்பம் : வி.எஸ்.சிவகரன் -


தமிழ்த் தேசிய அரசியலை கொழும்பிலே அடகு வைத்து ஆதாயச் சூதாடிகளாகி விட்ட இந்த தமிழ்த் தேசிய அரசியலுக்கு முடிவு கட்டுகின்ற நோக்கில் தர்ம யுத்தத்தை தாம் ஆரம்பித்துள்ளதாக ஜனநாயக தமிழரசு கட்சியின் செயலாளர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் சார்பில் தமிழர் விடுதலைக்கூட்டணியின் சார்பாக மன்னார் மாவட்டத்தில் உள்ள 5 உள்ளூராட்சி மன்றங்களிலும் போட்டியிடுவதற்காக இன்று காலை மன்னார் தேர்தல் அலுவலகத்தில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.தெரிவிக்கையிலேயே வி.எஸ்.சிவகரன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்,“எமது தர்ம யுத்தம் ஜனநாயக ரீதியான அடிப்படை கோட்பாட்டையும், தமிழ்த் தேசிய விடுதலையின் நோக்கையும், வடக்கு கிழக்கு இணைந்த தாயக கோட்பாட்டினுடைய அடிப்படை கட்டமைப்பையும் நாங்கள் நிறை வேற்றுகின்ற இந்த புதிய நோக்கோடு மாற்றுக்களத்தை திறந்து விட்டிருக்கின்றோம்.

எங்களோடு கை கோர்க்க எங்களோடு இணைந்து பயணிக்க வருமாறு எல்லோரையும் அழைக்கின்றோம்.ஒற்றையாட்சிக்கு உட்பட்ட அரசியலமைப்பை ஏற்றுக்கொள்ளுகின்ற நோக்கோடு தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு தலைமை தாங்குகின்றோம் என கூறுபவர்கள் தமிழ் மக்களை தவறாக வழி நடத்துகின்ற போக்கும், கொழும்பிலே தமிழ் மக்களை அடகு வைத்திருக்கின்ற நிலைப்பாடும் இருக்கின்ற காரணத்தினாலேயே நாங்கள் இந்த தர்ம யுத்தத்தினை தொடங்கியுள்ளோம்.

எமது தர்ம யுத்தம் வெற்றி பெறும். 'அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும்' என்பது போல் பிழைத்துப்போன அரசியலை, அறத்தை வெற்றி பெற வைக்க வேண்டிய தர்ம யுத்தம் வெற்றி பெறும் என்பதனை கூறிக்கொள்ளுகின்றேன்.என அவர் மேலும் தெரிவித்தார்.இதன் போது ஈ.பி.ஆர்.எல்.எப்.அமைப்பின் மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆர்.குமரேஸ், மன்னார் நகர சபையின் முன்னாள் உப தலைவர் ஜேம்ஸ் ஜேசுதாஸ், மன்னார் நகர சபையின் முன்னாள் உறுப்பினர் மெரினஸ் பேரேரா உட்பட பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் தேசிய அரசியலுக்கு முடிவு கட்டுகின்ற தர்ம யுத்தம் ஆரம்பம் : வி.எஸ்.சிவகரன் - Reviewed by Author on December 15, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.