அண்மைய செய்திகள்

recent
-

நூறு ஆண்டுகள் பழமையான இலங்கை நாணயங்கள் இந்தியாவில் கண்டுபிடிப்பு!


இலங்கையில் புழக்கத்தில் இருந்த நூறு ஆண்டுகள் பழமையான நாணயங்கள் தமிழகம் - சேதுக்கரை பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலை பாடசாலையில் தொன்மைப் பாதுகாப்பு மன்றத்தைச் சேர்ந்த மாணவர்கள் இதனை கண்பிடித்துள்ளனர்.

குறித்த மாணவர்கள், பழங்காலத்துப் பொருட்கள், நாணயங்கள், வரலாற்றுச் சுவடுகள் ஆகியவற்றை சேகரித்து ஆவணப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இலங்கை, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் ஆங்கிலேயர்கள் காலத்தில் பயன்படுத்திய நாணயங்களை குறித்த மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இதன்படி, இலங்கை நாணயம் 1 சதம் ஒன்றும், அரை சதம் இரண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குறித்த நாணயம் கி.பி.1901, 1912, 1926 ஆகிய ஆண்டுகளைச் சேர்ந்தவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவற்றின் ஒரு பக்கத்தில் விக்டோரியா மகாராணி, ஐந்தாம் ஜோர்ஜ் மன்னர் ஆகியோரின் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. மறு பக்கத்தில் தாளிப்பனை மரம் உள்ளது. அத்துடன் நாணயத்தின் மதிப்பு தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் எழுதப்பட்டுள்ளன.



வட்டவடிவிலான செப்பு நாணயங்களே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த நாணயத்தில் அரை என்னும் பின்னம் பத்தாம் நூற்றாண்டு கல்வெட்டுகளில் காணப்படுவதை போன்ற தமிழ் எண்ணுருவில் பதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து இராமநாதபுரம் மாவட்ட தொன்மைப் பாதுகாப்பு மன்றங்களின் ஒருங்கிணைப்பாளர் வே.ராஜகுரு கருத்து தெரிவிக்கையில்,
“இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி, சேதுக்கரை ஆகிய இடங்கள் இராமாயாணத்துடன் தொடர்புடையன. சேதுக்கரைக் கடலில் புனித நீராடும் வழக்கம் பழங்காலம் முதல் இருந்துள்ளது.
நீராடிய பிறகு ஆடை, காசுகளை கடலில் விட்டுச் செல்கிறார்கள். மேலும் வைகையின் கிளை ஆறான கொற்றக்குடி ஆறு, திருப்புல்லாணி வழியாகச் சென்று சேதுக்கரையில் கடலில் கலக்கிறது.

இதனால் இக்கடலோரத்தில் பழைய காசுகள் கிடைப்பதுண்டு. ஆங்கிலேயர் ஆட்சியில் இலங்கை, இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்தது. புனித நீராடலுக்காக இலங்கையில் இருந்து மக்கள் இங்கு வந்துள்ளார்கள்.
இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இலங்கை, தென்னாப்பிரிக்கா, மலேசியா, பர்மா போன்ற நாடுகளுக்கு வேலைக்காகச் சென்று திரும்பி வந்தபோது அங்குள்ள நாணயங்களை கொண்டு வந்துள்ளனர்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நூறு ஆண்டுகள் பழமையான இலங்கை நாணயங்கள் இந்தியாவில் கண்டுபிடிப்பு! Reviewed by Author on January 18, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.