மாந்தை மேற்கு பிரதேசச் செயலகத்தின் ஏற்பாட்டில் சிறப்பாக இடம் பெற்ற உழவர் விழா மற்றும் மூத்த விவசாயிகள் கௌரவிப்பு நிகழ்வும்-(படம்)
மாந்தை மேற்கு பிரதேசச் செயலகத்தின் ஏற்பாட்டில் உழவர் விழா மற்றும் மூத்த விவசாயிகள் கௌரவிப்பு நிகழ்வும் இன்று திங்கட்கிழமை 22-1-2018 காலை மாந்தை மேற்கு பிரதேசச் செயலகத்தில் பிரதேசச் செயலாளர் எஸ்.கேதீஸ்வரன் தலைமையில் இடம் பெற்றது.
-இதன் போது பொங்கல் பொங்கப்பட்டு வைபவ ரீதியாக நிகழ்வுகள் இடம் பெற்றதோடு மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள மூத்த விவசாயிகள் 13 பேர் விசேட விதமாக கௌரவிக்கப்பட்டனர்.
-தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு பொன்னாடை பேர்த்தி மாலை அணுவித்து பரிசில்; வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
அதனைத்தொடர்ந்து மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் எஸ்.கேதீஸ்வரன் தலைமையில் விசேட நிகழ்வுகள் இடம் பெற்றது.
இதன் போது மாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி கேதீஸ்வரன்,பிரதேசச்செயலக பணியாளர்கள்,கிராம அலுவலகர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மாந்தை மேற்கு பிரதேசச் செயலகத்தின் ஏற்பாட்டில் சிறப்பாக இடம் பெற்ற உழவர் விழா மற்றும் மூத்த விவசாயிகள் கௌரவிப்பு நிகழ்வும்-(படம்)
Reviewed by Author
on
January 22, 2018
Rating:
No comments:
Post a Comment