அண்மைய செய்திகள்

recent
-

மாந்தை மேற்கு பகுதியில் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரின் விட்டின் மீது தாக்குதல்-(படம்)


 மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் ஆட்காட்டிவெளி வட்டாரம் 6இல் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளரான சூசை சந்தான் என்பவரின் வீட்டிற்கு நேற்று சனிக்கிழமை(13) இரவு சென்ற இனம் தெரியாத நபர்கள் வீட்டின் மீது கல் வீசி தாக்குதல்களை மேற்கொண்டதோடு,வீட்டினுள் பாட்டசினை கொழுத்தி போட்டுவிட்டுச் சென்றுள்ளதாக இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை குறித்த வேட்பாளர் அடம்பன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

-குறித்த சம்பவம் தொடர்பில் ஆட்காட்டிவெளி வட்டாரம் 6 இல் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளரான சூசை சந்தான் மேலும் தெரிவிக்கையில்,,,

-நேற்று சனிக்கிழமை இரவு இனம் தெரியாத நபர்கள் எனது வீட்டை முற்றுகையிட்டனர்.

-பின் எனது வீட்டில் இலங்கை தமிழரசுக்கட்சியின் வீட்டுச்சின்னத்திற்கான சுவரொட்டிகளை ஒட்டி விட்டு,வீட்டின் வெளியில் நின்று வீட்டின் மீது கற்களை எறிந்து தாக்குதல் நடத்தியதோடு,பட்டாசினையும் கொழுத்தி போட்டு விட்டு ஓடி விட்டனர்.

-ஆனால் அப்பகுதியில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் அனைத்தும் வீட்டுச்சின்னத்திற்கானதாக காணப்படுகின்றது.

 எனது விட்டிற்கு முன் இனம் தெரியாத நபர்கள் நின்று கொண்டு தர்க்கத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது பல தடவைகள் அடம்பன் பொலிஸ் நிலையத்திற்கு தொலைபேசியுடாக தொடர்பு கொண்டு தெரிவித்த போதும் பொலிஸார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வரவில்லை.

இந்த நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை அடம்பன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளேன்.என அவர் மேலும் தெரிவித்தார்.

மாந்தை மேற்கு பகுதியில் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரின் விட்டின் மீது தாக்குதல்-(படம்) Reviewed by Author on January 15, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.