சற்றுமுன் வவுனியாவில் ஆண்,பெண் இருவரின் சடலம் மீட்பு-நடந்தது என்ன....
வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியில் இன்று இரண்டு சடலங்கள் வீட்டிற்குள் மீட்கப்பட்டுள்ளது.
மகாறம்பைக்குளம் பொலிஸ் நிலையத்திற்கு பின்புறம் உள்ள வீடொன்றிலிருந்து குறித்த இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன
வவுனியா நெடுங்குளம் பகுதியை சேர்ந்த பியசேனகே எதிரிசிங்க என்பவரது சடலம் தூக்கில் தொங்கிய நிலையிலும் அருகிலிருந்த படுக்கையில் செல்வம் புஷ்பராணி என்பவரது சடலம் தலையில் பலத்த அடிகாயத்துடனும் மீட்கப்பட்டுள்ளது
அருகினில் குறித்த பெண்மீது தாக்குதல் மேற்கொண்டதாக சந்தேகிக்கப்படும் பொல்லு ஒன்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர்
குறித்த நபர் அப்பெண்ணுடன் தகாத உறவை பேணிவந்தவர் எனவும் அறியப்படுகிறது
இதேவேளை குறித்த நபரே பெண் மீது தாக்குதலை மேற்கொண்டு கொலை செய்த பின் தானும் தற்கொலை செய்து கொண்டாரா..? இல்லை வேறொருவர் இரட்டை கொலையும் மேற்கொண்டாரா ? என்று பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
சற்றுமுன் வவுனியாவில் ஆண்,பெண் இருவரின் சடலம் மீட்பு-நடந்தது என்ன....
Reviewed by Author
on
January 09, 2018
Rating:
No comments:
Post a Comment