நைஜீரியாவில் தற்கொலைப் படையினர் தாக்குதல்: 22 பேர் பரிதாபமாக பலி -
பொர்னோ மாகாணத்தின் கொண்டுகா பகுதியில் உள்ள மீன் மார்க்கெட் ஒன்றில் நேற்றிரவு 7 மணியளவில் தற்கொலைப் படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
மூன்று பேர் நடத்திய அந்த பயங்கர தாக்குதலில் ஒரு ராணுவ வீரர் உட்பட 22 நபர்கள் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.
அதுமட்டுமல்லாமல், 70-க்கும் மேற்பட்ட நபர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் 28 நபர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிகிறது.
இஸ்லாத்துக்கு எதிராக நைஜீரிய ராணுவத்திற்கு உதவிவரும் CTJF(Civilian Joint Task Force) இயக்கத்தைச் சேர்ந்த பபகுரா கொலொ, முசா அரி உள்ளிட்டோர் கூறுகையில், தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் மூவருமே ஆண்கள் தான் என உறுதியாக தெரிவித்துள்ளனர்.
மேலும், நைஜீரியாவில் கடந்த 2009 முதல் இடம்பெற்ற தாக்குதல்களில் திட்டத்தட்ட 20,000 நபர்களாவது பலியாகி இருக்கலாம் என புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நைஜீரியாவில் தற்கொலைப் படையினர் தாக்குதல்: 22 பேர் பரிதாபமாக பலி -
Reviewed by Author
on
February 17, 2018
Rating:
No comments:
Post a Comment