அண்மைய செய்திகள்

recent
-

சுதந்திரதினத்திலும் எமக்கான சுதந்திரம் இல்லை: காணாமல் ஆக்கப்பட்டேரின் உறவுகள்!



இலங்கையின்70ஆவதுசுதந்திரதினத்திலும் எமக்கான சுதந்திரம் இல்லாத நிலையே உள்ளது என தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வவுனியாவில் இன்று அமைதியான முறையில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கண்டி வீதியில் பிரதான தபால் நிலையத்திற்கு முன்பாக கடந்த 346 ஆவது நாளாக சுழற்சி முறையில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் 70 ஆவது சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இக் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது 70 ஆவது சுதந்திர தினத்தினை கொண்டாடும் ஸ்ரீலங்காவின் சிங்கள மக்களுக்கு வாழ்த்துக்கள் இப்படிக்கு தொடர்ந்தும் சுதந்திரத்திற்காக போராடும் தமிழர்கள் என வாசகம் பொறிக்கப்பட்ட பதாதையை தாங்கியிருந்ததுடன், தமிழ் யுத்த கைதிகள் இன்றும் ஸ்ரீலங்கா சிறையில்.., ஸ்ரீலங்காவில் காணாமல் ஆக்கப்பட்டோர் 20000 தமிழர்கள், தமிழர்களை கடத்தவும் சிறையில் வைக்கவும் உருவானதே பயங்கரவாத தடைச்சட்டம் என்ற வாசகங்களும் குறித்த பதாதையில் பொறிக்கப்பட்டிருந்தது.

சுதந்திரதினத்திலும் எமக்கான சுதந்திரம் இல்லை: காணாமல் ஆக்கப்பட்டேரின் உறவுகள்! Reviewed by Author on February 05, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.