அண்மைய செய்திகள்

recent
-

அம்மாவை கொலை செய்யலைனா..என்னை கொன்றுவாங்க: மீட்கப்பட்ட சிறுவன் வேதனை -


நான் என் அம்மாவை கொலை செய்யவில்லை என்றால், அவர்கள் என்னை கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டியதாக ஆயுத குழுவிலிருந்து மீட்கப்பட்ட சிறுவன் கூறியுள்ளான்.
தெற்கு சூடானில் கடந்த 5-ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது.
இதில் 19,000-க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமியர் கிளர்ச்சியாளர்களுக்கும், இராணுவத்திற்கும் ஆயுதம் தாங்கிய வீரர்களாக பணிபுரிந்திருக்கிறார்கள்.

இதையடுத்து கடந்த புதன் கிழமை ஆயுதம் தாங்கிய குழுக்களிடமிருந்து சுமார் 300 சிறுவர்களும் 87 சிறுமிகளும் மீட்கப்பட்டனர்.
இதில் மீட்கப்பட்ட சிறுவன், நான் என்னுடைய 10 வயதில் ஆயுதப்படை வீரனாக மாறிவிட்டேன். அப்போது அம்மா எனது தளபதியிடம் என்னை விடுவுக்குமாறு கூறினார். ஆனால் அவர்களோ உன் அம்மாவை கொல்லும்படி கூறினார்கள்.

இல்லையேல் அதற்கு பதிலாக நீ கொல்லப்படுவாய் என்று மிரட்டினார்கள்.இதனால் வேறு வழியின்றி கடவுளிடம் வேண்டினேன், அது போன்றே அம்மா அன்று தப்பித்துவிட்டார். தற்போது என் குடும்பமும் என்னை மன்னித்து விட்டது என்று கூறினான்.
மேலும் ஐ. நா. தரப்பில், சுமார் 224 சிறுவர்களும், 87 சிறுமிகளும் ஆயுதங்களைத் துறந்துள்ளனர். இன்னும் வரும் வாரங்களில் சுமார் 700 பேர் விடுவிக்கப்படுகின்றனர்.
இதுவரை 2,000 சிறுவர் சிறுமிகளை ஐ. நா.விடுவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.





அம்மாவை கொலை செய்யலைனா..என்னை கொன்றுவாங்க: மீட்கப்பட்ட சிறுவன் வேதனை - Reviewed by Author on February 09, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.