அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் இந்துக்களின் சிலை உடைப்பு இந்துக்குருமார் பேரவை கடும் கண்டனம்......


இந்துக்களின் புனித விரதமான மஹா சிவராத்திரிக்கு முதல் நள் இரவு மன்னாரில் லிங்கேஸ்வர ஆலயத்தின் லிங்கம் தரைமட்டமாக உடைத்து களவாடப்பட்டதுடன் தள்ளாடி திருக்கேதீஸ்வரம் வீதியிலே விநாயகர் சிலையும் களவாடப்பட்டது.

இது மட்டுமல்லாமல் கீரிச்சந்தியில் விநாயகப் பெருமானுடைய கைகள் செவிகள் உடைக்கப்பட்ட நிலையில் எமது மதத்தின் புனிதத்தை கெடுக்கும் நோக்குடனும்  மதங்களுக்கிடையிலான குழப்பங்களையும் ஏற்படுத்த சில தீய சக்திகள் அண்மைக்காலமாக முனைந்துள்ளன. இப்படியான செயற்பாடுகள் தொடர்ச்சியான முறையில் நடைபெற்று வருகின்றன.

இவ்வாறான செயற்பாடுகள் தொடர்ந்து நடைபெறுவதை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம் என இந்துக்குருமார் பேரவை தலைவர் மஹா தர்மகுமார குருக்கள் தெரிவித்துள்ளார்.


மஹா தர்மகுமார குருக்கள் 
தலைவர்  

இந்துக்குருமார் பேரவை 
 






மன்னாரில் இந்துக்களின் சிலை உடைப்பு இந்துக்குருமார் பேரவை கடும் கண்டனம்...... Reviewed by Author on February 14, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.