மன்னாரில் மீண்டும் காடையர்களின் அட்டகாசம் மூன்று இடங்களில் இந்துக்களின் சிற்றாலயங்கள் உடைப்பு.......
மன்னாரில் இந்துக்கோயில்கள் மீது மீண்டும் தாக்குதல்கள் இடம் பெற்றுள்ளன.
மகா
சிவராத்திரி தினத்தன்று மன்னாரில் இந்துக்களின் சிற்றாலயங்கள்
உடைக்கப்பட்டமை மற்றும் அங்கிருந்து திருடி கொண்டு செல்லப்பட்டுள்ளமை
மன்னார் மாவட்ட இந்து மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், கவலையையும்
ஏற்படுத்தியுள்ளது.
- நேற்று இரவு கீரிசந்தியிலுள்ள பிள்ளையாரும் மன்னார்-தாழ்வுபாடு பிரதன வீதி கீரி சந்தியில் கடந்த 18 வருடங்களாக காணப்பட்ட ஆலையடி பிள்ளையார் சிலை இனம் தெரியாத நபர்களினால் உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளது.
- தலைமன்னார் பிரதான வீதியில் இளைஞர்கள் சேவைகள் மன்றத்திற்கு முன்னாள் அமைந்துள்ள 1988 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இந்திய இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட 'லிங்கேஸ்வரர்' தேவஸ்தானத்தில் காணப்பட்ட மூன்று சிலைகள் அங்கிருந்து திருடிச் செல்லப்பட்டுள்ளது.
- மன்னார்-தள்ளாடி விமான ஓடு பாதைக்கு முன்பாக AIR FORCE CAMP அருகில் உள்ள பல தடவைகள் இனம் தெரியாத நபர்களினால் உடைக்கப்பட்ட நிலையில்,மீண்டும் புதிதாக அமைக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த பிள்ளையார் சிலை அங்கிருந்து திருடிச் செல்லப்பட்டுள்ளது.
குறித்த
தேவஸ்தானத்தினுள் கடந்த 30 வருடங்களாக காணப்பட்ட சிவலிங்கம்,புத்தர்
சிலை,பிள்ளையார் சிலை ஆகிய மூன்று சிலைகள் அங்கிருந்து திருடிச்
செல்லப்பட்டுள்ளது.
இதனை செய்தவர்கள் சமயமுரண்பாடுகளை உண்டுபண்ணும் நோக்க முள்ளவர்களாக இருப்பார்கள் என மக்கள் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் விசாரனைகள் மேற்கொண்டுள்ளனர்.
மன்னார் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக சிலைகள் உடைக்கப்பட்டு வருகின்றது .
வீதீகளின் அருகில் உள்ள சிலைககள் இந்து-கிறிஸ்ரியன் மதங்களைச்சேர்ந்த வழிபாட்டு சுருவங்கள் சிலைகள் உடைக்கப்பட்டு வருவது வழக்கமாக நடைபெற்று வருகின்றது
இவ்வாறான பல் செயற்பாடுகள் நடந்துள்ள போதும் சுமார் 03-06 மாதங்கள் இடைவெளியில் மாறி மாறி மக்கள் புழக்கம் இல்லாத நேரத்திலும் இரவு நேரத்திலும் திட்டமிட்டு ஒரு குழுவோ அல்லது ஒரு சிலரோ இப்படியான இழிவான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்
மன்னார் மாவட்டத்தில் உள்ள சமயங்களுக்கிடையில் உள்ள ஒற்றுமையினை சுமூகமான உறவை சீர்குலைப்பதற்கும் முரண்பாடுகளை ஏற்படுத்தி தமது சுயநலனுக்காய் செயற்பட்டு வருகின்றனர்
இவ்வாறான எளிய கீழ்த்தரமான செயட்பாடுகளை தொடர்ச்சியாக செய்து வரும் கும்பலை இனங்கண்டு பொலிசார் தகுந்த நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும்
இதுவரை யாரும் கைதுசெயயப்படவில்லை...
சந்தேகம் எழுகின்றது-----
- யார் இவர்கள்....???
- மன்னாரில் இருக்கின்றார்களா---???
- இவர்களின் திட்டம் என்ன---???
- யார் இயக்குகின்றார்கள் இவர்களை.....???
இன்னும் இவ்வாறான் செயற்பாடுகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்கவில்லையே.....
சமயத்தலைவர்களே விழிப்பாய் இருங்கள்
சதிக்காரர்களின் வலையில் சிக்கி விடாதீர்கள்......
மன்னாரில் மீண்டும் காடையர்களின் அட்டகாசம் மூன்று இடங்களில் இந்துக்களின் சிற்றாலயங்கள் உடைப்பு.......
Reviewed by Author
on
February 13, 2018
Rating:
No comments:
Post a Comment