மன்னார் திரு கேதீஸ்வர வர்த்தக வளாகம் துப்பரவு செய்யப்படவில்லை.....
மன்னார் திரு கேதீஸ்வரம் ஆலயத்தில் சிவராத்திரி விழா நடைபெற்று ஒரு வாரகாலம் நிறைவடைந்துள்ளது.
அங்கு வர்த்தக வளாகமாக இருந்த இடத்தைப்பாருங்கள்.
எமது மாவட்டத்தில் பிரசித்திபெற்ற மிக தொன்மையான சைவசமய ஆலயத்தின் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்வது நமது பாரிய கடமையாகும்.
இந்த ஆலயத்திற்கு இலங்கை மற்றும் வெளிநாடுகளில் இருந்து பக்தர்களும் சுற்றுலா பயணிகளும் வரும் இடமாகும்.
இங்கு கடைகள் அமைத்ததற்கு ஆலய நிர்வாகமோ அல்லது பிரதேச சபையோ கடைகளுக்கு கட்டணம் வசூலிக்க வில்லையா??
பிரதேச சபையோரே ஏன் இவற்றை துப்பரவு செய்யவில்லை நீங்கள் இது உங்கள் பணி இல்லையா???
ஆலய நிர்வாகமே ஏன் நீங்கள் இதற்காக நடவடிக்கை மேற்கொள்ளவில்லை??
இந்த பகுதி பொது சுகாதார பரிசோதகரே ஏன் நீங்கள் இவற்றை கண்டு கொள்வதில்லை.??
இதற்கு உடனடியாக தீர்வுகண்டு சூழலை தூய்மையாக வைக்க உதவிடுங்கள்.
இது எமது மாவட்ட நலன் தூய்மையான நகராக எமது நகரை வைத்திருப்பது எமது ஒவ்வொருவரது கடமையாகும்.
Thanks Mano Giritharan-
மன்னார் திரு கேதீஸ்வர வர்த்தக வளாகம் துப்பரவு செய்யப்படவில்லை.....
Reviewed by Author
on
February 21, 2018
Rating:
No comments:
Post a Comment