நளினியை விடுதலை செய்ய முடியாது: தமிழக அரசு -
எம்.ஜி.ஆரின் 100-வது பிறந்தநாளை முன்னிட்டு 10 ஆண்டு, 20 ஆண்டு தண்டனை முடித்த ஆயுள் தண்டனைக் கைதிகளை வரும் 25-ம் திகதி விடுவிக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
இதை தொடர்ந்து தமிழக உள்துறைச் செயலாளர் தமிழகத்தில் உள்ள 9 மத்திய சிறை அதிகாரிகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி வைத்தார்.
அதில், நல்லொழுக்கம் மற்றும் மனிதாபிமான அடிப்படையில் கைதிகளை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகவும், அதற்கான பட்டியலைத் தயாரித்து வழங்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
அரசுக்குப் பரிந்துரைக்கப்பட்ட பட்டியலில் ராஜீவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளிகள் முருகன், பேரறிவாளன், சாந்தன், நளினி ஆகியோர் பெயர்கள் இடம் பெற்றிருந்தன.
ஆனால், சட்டபிரிவு 435-ன்படி நளினியை விடுதலை செய்ய முடியாது என்று தமிழக அரசு தற்போது கூறியுள்ளது.
இதையடுத்து குறித்த சட்டப்பிரிவு அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என அறிவித்து தன்னை விடுதலை செய்ய கோரி நளினி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
நளினியை விடுதலை செய்ய முடியாது: தமிழக அரசு -
Reviewed by Author
on
February 13, 2018
Rating:
No comments:
Post a Comment