அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்டத்தில் அமைதியான முறையில் வாக்களிப்பு நிறைவு-(PHOTOS)

உள்ளுராட்சி மன்ற தேர்தல் இன்று சனிக்கிழமை(10) இடம் பெற்ற நிலையில் மன்னார் மாவட்டத்தில்; அமைதியான முறையில் தேர்தல் வாக்களிப்புக்கள் நிறைவடைந்துள்ளது.


மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகர சபை,மன்னார் பிரதேச சபை,நானாட்டான் பிரதேச சபை,முசலி பிரதேச சபை,மாந்தை மேற்கு பிரதேச சபை ஆகிய ஐந்து உள்ளுராட்சி மன்றங்களுக்குமான தேர்தல் இடம் பெற்று வருகின்றது.

மன்னார் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 94 வாக்கெடுப்பு நிலைங்களிலும் அமைதியான முறையில் வாக்களிப்புக்கள் இடம் பெற்றது.

இந்த நிலையில் இன்று சனிக்கிழமை (10) காலை முதல் 3 மணிவரை 70 வீதமான வாக்குகள் பதிவாகியுள்ளதாக மன்னார் தேர்தல் அலுவலம் தெரிவித்துள்ளது.

அமைதியான முறையில் 94 வாக்களிப்பு நிலையங்களிலும் தேர்தல் இடம் பெற்றுள்ளது.பொலிஸாரும்,விசேட அதிரடிப்படையினரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

மன்னார் மாவட்டத்தில் 47 வட்டாரங்களில் இருந்தும் 54 உறுப்பினர்களை தெரிவு செய்ய இடம் பெற்று வரும் தேர்தலில் வாக்களிப்பதற்கு 86 ஆயிரத்து 94 பேர் தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விரைவில் மேலதிக விபரங்கள்.............



மன்னார் மாவட்டத்தில் அமைதியான முறையில் வாக்களிப்பு நிறைவு-(PHOTOS) Reviewed by NEWMANNAR on February 10, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.