மன்-புனித சவேரியார் பெண்கள் தேசிய கல்லூரி மாணவி சீலன்.மேரி நிதுசாவுக்கு பாராட்டு விழா
2017 ம் ஆண்டு க.பொ.த உயர்தரப்பரீட்சையில் மன்னார் மாவட்டத்தில்
மன்னார் புனித சவேரியார் பெண்கள் தேசிய கல்லூரி மாணவி சீலன்.மேரி நிதுசா உயிரியல் விஞ்ஞானம் பிரிவில் 01ம் இடம் பெற்றுக்கொண்டார்.
அவரின் திறமையினையும் சாதனையினையும் கௌரவிக்கும் முகமாகவும் ஏனைய மாணவிகளின் திறமையினை வெளிக்கொணரவும் ஊக்கத்தினை வழங்கும் முகமாகவும் பாடசாலைச்சமூகத்தினரால் இன்று காலை 7.45 மணியளவில் கல்லூரி முதல்வர் அருட்சகோதரி S.ஹில்டா தலைமையில் மன்னார் கல்விவலையப்பணிப்பாளர் திருமதி சுகந்தி செபஸ்தியன் உதவி கல்வி பணிப்பாளர் விளையாட்டு திரு பி.ஞானராஜ் அவர்களும் செபஸ்தியார் ஆலயத்தின் இணை பங்கு தந்தை அருட் தந்தை பீட்டர் மனோகரன் அவர்களும் விருந்தினராக கலந்து கொண்டு சாதனை மாணவியினையும் அவரது பெற்றோரினையும் பாராட்டும் நிகழ்வு கல்லூரி வளாகத்தில் சிறப்பாக இடம்பெற்றது.
இதன் போது குறித்த மாணவி விருத்தினர்களினால் கௌரவிக்கப்பட்டு பதக்கமும் நினைவுச்சின்னமும் வழங்கியது பாராட்டுக்குரியது மதிப்பளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நிகழ்வில் உரை ஆற்றிய வலய கல்வி பணிப்பாளர் மன்னார் மாவடடத்தை பொறுத்த வரையில் பெண்கள் உயிரில் கணித பிரிவுகளில் பிரகாசிப்பது கடந்த காலங்களில் குறைவு எனவும் அண்மைய காலங்களில் இது மாற்றி அமைக்கபடுவதாகவும் தற்போது பெண்கள் அதிக அளவில் நல்ல பெறுபேறுகளை பெறுவதகவும் அதனால் தான் வரலாற்றில் முதல் முறையாக அகில இலங்கை ரீதியில் முதலிடத்தை பெற்று சாதனை நிகழ்தியுள்ளது எனவும் குறிப்பிட்டார்
இவ்நிகழ்வில் கல்லூரியின் மாணவர்கள் ஆசிரியர்கள் அதிகாரிகள் கலந்து சிறப்பித்தனர்.
மன்-புனித சவேரியார் பெண்கள் தேசிய கல்லூரி மாணவி சீலன்.மேரி நிதுசாவுக்கு பாராட்டு விழா
Reviewed by Author
on
February 21, 2018
Rating:
No comments:
Post a Comment