அண்மைய செய்திகள்

recent
-

கனடாவில் போராடும் இலங்கைப் பெண்! -


இலங்கையில் பிறந்த பெண் ஒருவர் கனேடிய சாதனையாளர்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என அந்நாட்டு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
சுபாகினி சிவபாதம் என்ற இலங்கை பெண்ணே இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.

இலங்கையில் பிறந்த சுபாகினி சிவபாதம் தென்னாப்பிரிக்காவில் வளர்ந்துள்ளார். தற்போது அவர் கனடாவில் சந்தைப்படுத்தல் மற்றும் தகவல் தொடர்பு இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தொழில் முனைவோர்களின் கண்டுபிடிப்புகள் மற்றும் வெற்றி பற்றிய கதைகள், கனேடிய சாதனைகளை உருவாக்கும் வலையமைப்புகளை உருவாக்குதல் மற்றும் நாட்டிலுள்ள முன்னணி மாற்றம் செயல்முறை தயாரிப்பாளர்களை காட்சிப்படுத்தல் மூலம் புதிய யோசனைகளை ஊக்குவிக்கும் நடவடிக்கையில் சுபாகினி ஈடுபட்டுள்ளார்.

அவர் வாழும் பகுதியில் இளைஞர்களுக்காக பணியாற்றுவதற்கு இடமில்லை என்று நம்புகையில், சுபாகினி இளைஞர்களை, குறிப்பாக இளம் பெண்களை, நமது சமுதாயத்தில் சமநிலையை வளர்ப்பதற்கு அவர் ஆர்வம் காட்டியுள்ளார்.

அத்துடன் பெண்கள் பொருளாதார சபை மற்றும் வேலைவாய்ப்பு தொழில் முனைவோர் நிகழ்ச்சித்திட்டத்திற்கான ஆலோசனை சபையிலும் சுபாகினி பணியாற்றுகிறார்.
தலைமை என்பது பேச்சுவார்த்தைக்கான இடத்தை உருவாக்குவதாகும், மற்றும் தலைமைத்துவத்தின் பன்முகத்தன்மையின் மூலம் மட்டுமே கூட்டு சிந்தனை என்ற சாத்தியமான அழகை நாம் அடைய முடியும் என்பதே சுபாகினியின் நோக்கமாக உள்ளது.
கனடாவில் போராடும் இலங்கைப் பெண்! - Reviewed by Author on March 01, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.