மக்களுக்கோர் அறிவித்தல்.....இதுவரை நீங்கள் செய்யவில்லையா.....
மக்களுக்கோர் அறிவித்தல்....இதுவரை நீங்கள் செய்யவில்லையா.....
ஆம் உங்களிடம் உள்ள
- கிழிந்த
- கசங்கிய
- சேதமாக்கப்பட்ட
- பெயரெழுதப்பட்ட
- மைபூசப்பட்ட
- துண்டான நாணயத்தாள்கள் அனைத்தினையும் இம்மாதம் 31-03- 2018 திகதிதான் இறுதி தினமாக நாணயத்திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது அதன் பின்பு எந்தவொரு நாணயத்தள்களினையும் வங்கிகளிலோ.....கடைகளிலோ.....மாற்றிக்கொள்ளவும் பொருட்களை வாங்கவும் முடியாது.
இவ்வாறான நாணயத்தாள்கள் பெறுமதியற்றதாகவே கருதப்படும் ஆகவே உங்களிடம் உள்ள மேற்குறித்த நாணயத்தாள்களினை அருகில் உள்ள வங்கிகள் அனைத்திலும் மாற்றிக்கொள்ளலாம் விரைவாக மாற்றி உங்கள் பெறுமதியான பணத்தினை பாதுகாத்து கொள்ளுங்கள்....
எமது இலங்கையின் பாவனையில் உள்ள நாணயத்தாள்களை சேதப்படுத்துதல் கிழித்தல் மாற்றங்களை ஏற்படுத்துதல்
உருச்சிதைத்தல் தண்டணைக்குரிய குற்றம் என்பதை அறிவீர்களா....
ஒரு நாட்டின் அழகை எப்படி அதன் வளங்கள் மக்களை வைத்து கணக்கிடுவதுபோல மிகவும் முக்கியமாக அதன் நாணயத்தினையும் கருத்தில் கொள்வது முதன்மையானது.
அதனால் எமது நாட்டின் அழகினை வெளிக்கொணரும் நாணயத்தாள்களின் நாம் எந்தவிதமான சேதங்களையும் ஏற்படுத்தாமல் தூய்மையாக அழகாக பயன்படுத்த பழகுவோம் மற்றவருக்கும் பழக்குவோம் தெரியப்படுத்துவோம் நல்ல விடையங்களுக்கு துணையாக இருப்போம்....
நாட்டின் வரலாற்றினையும் பாராம்பரியத்தினையும் வெளிப்படுத்தும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட அடையாளமே நாணயம் எனலாம்
உலகின் அழகான நாணயங்கள் என கருத்துக்கணிப்பும் நடைபெறுகின்றமை வழமையானதுதான்.
-வை.கஜேந்திரன்-
மக்களுக்கோர் அறிவித்தல்.....இதுவரை நீங்கள் செய்யவில்லையா.....
Reviewed by Author
on
March 02, 2018
Rating:
No comments:
Post a Comment