அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் ஆயரின் பங்களிப்புடன் மன்னாரில் ஆங்கில டிப்ளோமா கற்கை நெறி வைபவ ரீதியாக ஆராம்பித்து வைப்பு-(படம்)

கொழும்பில் உள்ள 'அக்குவாயினஸ்' உயர் கல்வி நிருவனத்தின் அனுசரனையுடன் மன்னாரில் உள்ள ஞானோதையம் எனும் சமய கல்விக்கான அமைப்புடன் இணைந்து மன்னாரில் இன்று சனிக்கிழமை(17) காலை ஆங்கில டிப்ளோமா கற்கை நெறி வைபவ ரீதியாக ஆராம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

மன்னார்-தாழ்வுபாடு பிரதான வீதியில் உள்ள ஞானோதைய மண்டபத்தில் அருட்தந்தை யூட் கறோல் தலைமையில் இடம் பெற்ற ஆராம்ப நிகழ்வில் பிரதம விருந்தினராக மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு  இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை மற்றும் விருந்தினர்களாக மன்னார் வலயக்கல்விப்பணிப்பாளர் திருமதி சுகந்தி செபஸ்தியன் உற்பட முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

-இதன் போது குறித்த ஆங்கில டிப்ளோமா கற்கை நெறியில் கலந்து கொள்ளும் மாணவர்கள் மற்றும் வடக்கில் ஏனைய மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களும் கலந்து கொண்டதோடு,மாணவர்களின் விசேட நிகழ்வுகளும் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.










மன்னார் ஆயரின் பங்களிப்புடன் மன்னாரில் ஆங்கில டிப்ளோமா கற்கை நெறி வைபவ ரீதியாக ஆராம்பித்து வைப்பு-(படம்) Reviewed by Author on March 17, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.