அண்மைய செய்திகள்

recent
-

மகன் தாயோடு சுடுகாடு செல்ல....... மகள் தந்தையோடு சிறைவீடு செல்ல.....

பொறுமனே என்று
வெறுமெனே.....முதலைக்கண்ணீர் வடிக்கும்
தறுதலை தமிழ் தலைமைகளை
மறுபடியும்....நடுத்தெருவில்.....????????

சிறையில் வாடும்-எம்
உறவுகளை-விடுவிக்க
சிறப்பாய் எந்த நடவடிக்கையும்-இல்லை
சினைத்தவளைகளாய்-தமிழ்தலைமைகள்
சினம்  கொண்டு எழத்தான் வேண்டும் போல......

கிளிநொச்சியில் நடந்த துயரம்
கிளிகள் இரண்டின் அவலம்
கிடைக்காது நீதியும் நியாயமும்
கீழ்த்தரமான எமது தலைமைகள் இருக்குமட்டும்

ச.ஆனந்த சுதாகர் மகசின் சிறையில் 10ஆண்டுகள் தவிப்பு
மனைவி யோகராணி 15-03-2018 மனவுளைச்சளால் இறப்பு
மகனும் மகளும் வாழ்வு பாதிப்பு
மானமுள்ள தலைமைகளே என்ன தீர்ப்பு

மகன் தாயோடு சுடுகாடு செல்ல
மகள் தந்தையோடு சிறைவீடு செல்ல
பிஞ்சுகளின் நெஞ்சிலும் தீ
மானங்கெட்ட  பிறப்புக்களாய்
மனதில் எழும்  கேள்விகள் என்ன சொல்ல
மரணம் தான எல்ல......மனிதம் எங்கே.....?

இளம்மொட்டுக்கள் கருகும்
இதயங்கள் உருகும்
இருள் படரும்
இன்னும்தொடரும்.......
இதற்கொரு முடிவு கட்டாவிடில்.

ஏழ்மையின் இயலாமை
எமனுக்கு அருமை
என்ன கொடுமை இது
எருமைகள் வாழும் நாடு இது

தானாய்...
தமிழனாய் எழாமல்
தனியே நின்று அழுவதை தவிர
தமிழனுக்கு வேறு வழியில்லையோ.....


இதற்காகதான் கேட்டோம் தனிநாடு
-தமிழ்மாடு-





மகன் தாயோடு சுடுகாடு செல்ல....... மகள் தந்தையோடு சிறைவீடு செல்ல..... Reviewed by Author on March 19, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.