அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் பள்ளமடுவில் அமைக்கப்பட்ட மன்னார் நீர்ப்பாசன பொறியியலாளர் பிரிவு அலுவலக புதிய கட்டிடம் திறந்து வைப்பு-(படம்)

மன்னார்-யாழ் பிரதான வீதி பள்ளமடுவில் அமைக்கப்பட்ட மன்னார் நீர்ப்பாசன பொறியியலாளர் பிரிவு அலுவலக புதிய கட்டிடம் இன்று புதன் கிழமை காலை 10 மணியளவில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

வடமாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியின் கீழ் அமைக்கப்பட்ட குறித்த கட்டிடத்தினை வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் மற்றும்  வடமாகாண சபை உறுப்பினர் எம்.ஏ.நியாஸ் ஆகியோர் இணைந்து வைபவ ரீதியாக திறந்து வைத்தனர்.

இதன் போது வடமாகாண விவசாய அமைச்சின் முக்கியஸ்தர்கள்,வடமாகாண நீர்பாசன திணைக்கள அதிகாரிகள் மாந்தை மேற்கு மற்றும் மடு பிரதேசச் செயலாளர்கள் , மன்னார் நீர்ப்பாசன பொறியியலாளர் பிரிவு அலுவலக அதிகாரிகள்,கிராம மக்கள்,பொது அமைப்புக்களின் பிரதி நிதிகள் என பலர் குறித்த நீர்ப்பாசன பொறியியலாளர் பிரிவு அலுவலக புதிய கட்டிடம் திறப்பு விழாவில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.











மன்னார் பள்ளமடுவில் அமைக்கப்பட்ட மன்னார் நீர்ப்பாசன பொறியியலாளர் பிரிவு அலுவலக புதிய கட்டிடம் திறந்து வைப்பு-(படம்) Reviewed by Author on March 29, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.