அண்மைய செய்திகள்

recent
-

யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நோக்கில் நடுவப்பணியகம் திறந்து வைப்பு -


வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கான நடுவப்பணியகம் கிளிநொச்சி கரடிப்போக்கு பகுதியில் இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பத்தின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்திற்காகவும், வறிய மாணவர்களுக்கான கல்வி வளர்ச்சியை ஊக்குவிக்கும் வாயிலாகவும் குறித்த நலன் காப்பக பணியகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வின்போது, யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்ற 50 குடும்பத்தாரர்களுக்கான வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான காசோலைகளும், கல்வி வளர்ச்சிக்கான வங்கி பற்றுச்சீட்டுக்களும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டுள்ளன.





யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நோக்கில் நடுவப்பணியகம் திறந்து வைப்பு - Reviewed by Author on March 19, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.