மன்னார் பொது வைத்தியசாலையில் அமைக்கப்பட்டுள்ள சிறு நீரக நோயாளர்களின் இரத்தம் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகள் ஆரம்பித்து வைப்பு-படம்
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அமைக்கப்பட்டுள்ள சிறு நீரக நோயாளர்களின் இரத்தம் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகள் நேற்று வியாழக்கிழமை(22) வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
வடமாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலனினால் குறித்த செயற்பாடுகள் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
சிறு நீரக நோயாளர்கள் தமது இரத்தத்தை சுத்தி கரிப்பதற்காக யாழ்ப்பாணம் மற்றும் அனுராதபுரம் வைத்திய சாலைகளுக்குச் சென்று வந்தனர்.
இந்த நிலையில் குறித்த நோயளர்களின் நலனை கருத்தில் கொண்டு மன்னார் மாவட்ட பொதுவைத்தியசாலையில் தொழில் நுற்பங்களுடன் கூடிய இரத்த சுத்திகரிப்பு நிலையம் வைபவ ரீதியாக திறந்து அதன் செயற்பாடுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
-நாள் ஒன்றிற்கு 4 சிறுநீரக நோயாளர்களுக்கு இரத்த சுத்திகரிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
மன்னார் பொது வைத்தியசாலையில் அமைக்கப்பட்டுள்ள சிறு நீரக நோயாளர்களின் இரத்தம் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகள் ஆரம்பித்து வைப்பு-படம்
Reviewed by Author
on
March 23, 2018
Rating:
No comments:
Post a Comment