இலங்கையர்களுக்கான புலமைப்பரிசில் திட்டங்களை அறிவித்தது இந்தியா! -
இலங்கை மாணவர்களுக்கான புலமைப்பரிசில் திட்டங்களை இலங்கையில் உள்ள இந்தியஉயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.
இந்திய கலாசார ஒத்துழைப்பு சபையின் இந்த புலமைப்பரிசில்கள், கலை மற்றும் இசைநடனத்துறைகளுக்கு வழங்கப்படவுள்ளன.
கல்விப் பொதுத் தராதர உயர்தரத்தில் மூன்று பாடங்களில் சித்தி பெற்றுள்ள 20-25வயதுக்கு உட்பட்டவர்கள் இந்த புலமைப்பரிசிலுக்காக விண்ணப்பிக்க முடியும் என்றுஅறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பங்களை கொழும்பில் உள்ள இந்திய கலாசார நிலையம், யாழ்ப்பாணத்தில் உள்ளஇந்திய தூதரக அலுவலகம், கண்டியில் உள்ள இந்திய உதவி உயர்ஸ்தானிகரகம்,ஹம்பாந்தோட்டையில் உள்ள இந்திய தூதரக அலுவலகம், என்பவற்றில்பெற்றுக்கொள்ளமுடியும்.
அத்துடன், www.iccr.gov.in என்ற இணையத்தில் இருந்து விண்ணப்பங்களை தரவிறக்கம்செய்து கொள்ள முடியும் என்றும் இ;ந்திய உயர்ஸ்தானிகரகம் அறிவித்துள்ளது.
இலங்கையர்களுக்கான புலமைப்பரிசில் திட்டங்களை அறிவித்தது இந்தியா! -
Reviewed by Author
on
March 15, 2018
Rating:
No comments:
Post a Comment