அண்மைய செய்திகள்

recent
-

தேசிய இளைஞர் மாநாட்டில் மன்னார் இளைஞர்கள் 13பேருக்கு வெற்றிச்சன்றிதழ்......



இலங்கை அபிவிருத்தி ஊடகவியலாளர் மன்றத்தின் SDJF ஏற்பாட்டில் இரண்டாவது தடவையாக தேசிய இளைஞர் மாநாடு-20-21-04-2018-(NYS-2018) இரண்டு நாள் நிகழ்வாக பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்திலும் BMICH தகவல் தொழில்நுட்ப அமைச்சின் கேட்போர் மண்டபத்திலும் INDM மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
இலங்கையின் உள்ள அனைத்து இளைஞர்களில் செயற்திட்டத்தில் பங்குபற்றிய இளைஞர்களுக்கான
  • •    புலனாய்வு ஊடக காணொளி அறிக்கை பயிற்சி
  • •    மக்கள் அரங்கசெயற்திட்டம்
  • •    புகைப்படபோட்டி வெற்றியாளர்கள்
  • •    பால்சமத்துவ அறிக்கை செயற்திட்டம்
  • •    இளைஞர்களின் ஆளுமையும் விருத்தியும்
  • •    ஊடகமும் குறும்பட ஆவணாக்கலும்
  • •    மனித உரிமைகள் சமாதான நல்லிணக்கம் போன்ற பலவகையான செயற்திட்டங்களில் கலந்து கொண்டு வெற்றிபெற்றமைக்கான சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டது.
இவ்வைபவத்தில் மன்னாரில் இருந்து
Big Picture புகைப்படபோட்டியில் ஜோசப் நயனுக்கும்
புலனாய்வு ஊடக காணொளி அறிக்கை பயிற்சியை நிறைவு செய்தமைக்காக வைரமுத்து கஜேந்திரனுக்கும்
மக்கள் அரங்க செயற்திடடம் மன்னாரில் சிறப்பான வெளிப்படுத்துகைக்காக 11பேர் கொண்ட குழுவுக்கும் (கடந்த ஆண்டு புனித சவேரியார் பெண்கள் கல்லூரியில் அரங்காற்றுகை சிறப்பு)வெற்றிச்சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இவ்நிகழ்வில் துறைசார் அதிகாரிகள் பணிப்பாளர்கள் நிதிப்பங்காளர்கள் இளைஞர்யுவதிகள் அரசஅதிகாரிகள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.









தேசிய இளைஞர் மாநாட்டில் மன்னார் இளைஞர்கள் 13பேருக்கு வெற்றிச்சன்றிதழ்...... Reviewed by Author on April 26, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.