ஆற்றில் படகுகள் கவிழ்ந்து விபத்து: 17 பேர் நீரில் மூழ்கி பலி -
சீனாவில் டிராகன் படகு போட்டி பாரம்பரிய கலாசார திருவிழாவாக பிரபலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு வரும் ஜூன் 18-ஆம் திகதி இதற்கான போட்டி நடைபெற உள்ளது.
இந்த போட்டியில் பங்கு பெறுவதற்காக சிலர் நீண்ட, குறுகிய வடிவிலான படகுகளில் பயிற்சி மேற்கொண்டனர்.
அவர்கள் பயணம் செய்த படகு ஒன்று குயிலின் நகரின் அருகே ஆற்றில் சென்றபொழுது நீரின் ஓட்டம் அதிகரிப்பில் சிக்கிய படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதேபோன்று மற்றொரு டிராகன் படகும் பயிற்சி மேற்கொள்பவர்களுடன் சென்று சிக்கி கவிழ்ந்தது. இதில் படகில் சென்ற 57 பேர் நீருக்குள் மூழ்கி உள்ளனர். அவர்களில் 17 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
200 பேர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். உயிர்காப்பு கவசம் அணியாமல் பலர் சென்ற நிலையில், உயிர் பலி நிகழந்துள்ளது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டுள்ள பொலிசார் இந்த விவகாரம் தொடர்பில் 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆற்றில் படகுகள் கவிழ்ந்து விபத்து: 17 பேர் நீரில் மூழ்கி பலி -
Reviewed by Author
on
April 23, 2018
Rating:
No comments:
Post a Comment