மடு பண்டிவிருச்சான் கிராமத்தைச் சேர்ந்த தேவையுடையவர்களுக்கு இலவசமாக வாசிப்பு மூக்குக்கண்ணாடிகள் வழங்கி வைப்பு-(படம்)
மடு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பண்டிவிருச்சான் கிராமத்தைச் சேர்ந்த ஒரு தொகுதி மக்களுக்கு வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் நேற்று ஞாயிற்றுக்கிழமை(8) இலவசமாக வாசிப்பு மூக்குக்கண்ணாடிகளை வழங்கி வைத்துள்ளார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை மதியம் பண்டிவிருச்சான் ஆலய பகுதியில் வைத்து வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலனினால் தேவையுடையவர்களுக்கு இலவசமாக வாசிப்பு மூக்குக்கண்ணாடிகள் வயது அடிப்படையில் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இதன் போது குறித்த கிராமத்தைச் சேர்ந்த பலர் மூக்குக் கண்ணாடிகளை பெற்றுக்கொண்டமை குறிப்பிடதத்க்கது.
மடு பண்டிவிருச்சான் கிராமத்தைச் சேர்ந்த தேவையுடையவர்களுக்கு இலவசமாக வாசிப்பு மூக்குக்கண்ணாடிகள் வழங்கி வைப்பு-(படம்)
Reviewed by Author
on
April 10, 2018
Rating:
No comments:
Post a Comment