அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் பிரதேச சபையை கைப்பற்றிய ஐக்கிய தேசியக் கட்சி -


மன்னார் பிரதேச சபையின் தலைவர் மற்றும் உப தலைவர் தெரிவு
மன்னார் பிரதேச சபையில் உள்ளுராட்சி ஆணையாளர் தலைமையில் இடம் பெற்றது.
இதன் போது மன்னார் பிரதேச சபையின் தலைவராக ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினர் எஸ்.எச்.முஜாஹிர் மற்றும் உப தலைவராக சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் எம். இஸ்ஸதீன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

சபையின் தலைவர் பதவிக்கு ஐக்கிய தேசியக்கட்சியின் உறுப்பினர் எஸ்.எச்.முஜாஹிர் மற்றும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் உறுப்பினர் கொன்சஸ் குலாஸ் ஆகிய இருவரும் முன் மொழியப்பட்டனர்.

இந்த நிலையில், மன்னார் பிரதேச சபையின் 21 உறுப்பினர்களும் பகிரங்க வாக்கெடுப்பிற்கு ஆதரவளித்த நிலையில் வாக்கெடுப்பு இடம் பெற்றது. ஐக்கிய தேசியக்கட்சியில் போட்டியிட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எஸ்.எச்.முஜாஹிர் 11 வாக்குகளையும், தமிழ் தேசியக்கூட்டமைப்பின் உறுப்பினர் கொன்சஸ் குலாஸ் 10 வாக்குகளையும் பெற்ற நிலையில் அதி கூடிய வாக்குகளை பெற்ற ஐக்கிய தேசியக்கட்சியில் போட்டியிட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எஸ்.எச்.முஜாஹிர் மன்னார் பிரதேச சபையின் தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.

இவருக்கு ஆதரவாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் உறுப்பினர் எஸ்.அந்தோனிப்பிள்ளை வாக்களித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து உப தலைவர் தெரிவு இடம் பெற்றது.
உப தலைவர் தெரிவின் போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் எம்.இஸ்ஸதீன் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர் எம்.தர்சீன் ஆகியோர் முன் மொழியப்பட்டனர்.
அனைவரும் பகிரங்க வாக்கெடுப்பிற்கு ஆதரவு தெரிவித்த நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் எம். இஸ்ஸதீன் 11 வாக்குகளையும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர் எம்.தர்சீன் 9 வாக்குகளைப் பெற்றிருந்தார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஜே.இன்சாப் வாக்களிக்காது நடு நிலை வகித்தார்.
அதி கூடிய வாக்குகளை பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் எம். இஸ்ஸதீன் மன்னார் பிரதேச சபையின் உப தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.

குறித்த அமர்வில் அமைச்சர் றிஸாட் பதியுதீன், பிரதி அமைச்சர் அமீர் அலி , வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சார்ள்ஸ் நிர்மலநாதன், மாகாண சபை உறுப்பினர் பிரிமூஸ் சிறாய்வா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.வினோ நோகராதலிங்கம் , ஹீனைஸ் பாரூக்,முத்தலீப் பாரூக், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மன்னார் பிரதேச சபையை கைப்பற்றிய ஐக்கிய தேசியக் கட்சி - Reviewed by Author on April 11, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.