அண்மைய செய்திகள்

recent
-

யாழ்ப்பாணம் இருந்து மன்னார் நோக்கி பயணித்த அரச பேரூந்து விபத்து.....



மன்னார் CTB சாலைக்கு செந்தமான பேரூந்தானது.
யாழ்ப்பாணம் இருந்து  22-05-2018 மாலை 5 -30 மணியளவில் மன்னார் நோக்கி பயணித்த அரச பேரூந்தானது தனங்கிளப்பு பகுதியில் வைத்து விபத்துக்குள்ளானது.

மேற்படி விபத்தானது  குறித்த பிரதான வீதியில் நின்றுகொண்டிருந்த பேரூந்துக்கு பின்னால் உள்ள குறுக்கொழுங்கையில் இருந்து  பிரதான வீதிக்கு ஸ்கூட்டியில்  வந்த பெண் முறைதவறி திருப்பியவேளையில் அதே சமயத்தில் பிரதான வீதியில் வேகமாக வந்த அரசபேரூந்துடன் மோதியே இவ்விபத்து நிகழ்ந்துள்ளது .
விபத்தின் போது ஸ்கூட்டியில்  வந்த பெண்ணுக்கு  ஒரு கையும் காலும் முறிந்த நிலையில் அப்பெண்ணை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் குறித்த பேரூந்தில் இருந்த பயணிகளை அடுத்த பேரூந்தில் ஏற்றியணிப்பியதுடன் சாரதியினை பேரூந்துடன் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.

குறிப்பு- இந்தப்பகுதியில்  இவ்வாறான விபத்துக்கள் அதிகமாக நடைபெறுகின்றது
சம்பவ இடத்தில் இருந்த மக்களின் கருத்து-இரண்டு தரப்பினரிலும் பிழையுள்ளது.
யாராக இருந்தாலும் உயிர் அல்லவா இழப்புக்களை ஈடுசெய்ய முடியாது அவதானமாக செயற்பட வேண்டும்.




யாழ்ப்பாணம் இருந்து மன்னார் நோக்கி பயணித்த அரச பேரூந்து விபத்து..... Reviewed by Author on May 23, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.